அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை – உ.பி. அரசு உத்தரவு

லக்னோ, உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் அடுத்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தேர்வு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 233-4

டர்பன், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் இன்று முதல் டெஸ்டில் மோதின.   இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், சரல் எர்வீயும் களமிறங்கினர். எல்கர் 67 ரன்களில் அவுட்டானார். சரல் எர்வீ 41 ரன்களில் வெளியேறினார். கீகன் பீட்டர்சன் 19 ரன்னிலும், ரியான் … Read more

பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நடந்து வருகிறது.  அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள சூழலில், அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், சிந்த் மாகாணத்தில் உள்ள கொத்ரி பகுதியின் அருகே ரெயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வைத்து அதனை வெடிக்க செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தில், அதன் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து … Read more

கொரோனா இறப்பு இழப்பீடு வழங்க 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டை வழங்க 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, 2022-ம் ஆண்டு மார்ச் 20 முதல் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதற்கு முன்பு நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் … Read more

உத்தப்பா- மொயீன் ஜோடியை தொடர்ந்து லக்னோ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சிவம் துபே..!!

உத்தப்பா – மொயீன் ஜோடியை தொடர்ந்து லக்னோ அணி பந்துவீச்சை மிரட்டும் துபே – ராயுடு ஜோடி ..!! மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை … Read more

நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் – இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வால்,  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் பலன் அடைவர். நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை  உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான … Read more

ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் தற்போது பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா … Read more

ராணுவ தளபதியுடன் சந்திப்பு: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.  இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி … Read more

எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் – மத்திய அரசை விமர்சித்த ஆதித்ய தாக்கரே

மும்பை, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு குறித்து மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். மராட்டிய மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. அதனால், தற்போது எரிபொருள் விலை அதிகரித்துவிட்டது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.  விலைவாசி குறைய … Read more