கோவிஷீல்ட் 2-வது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் அடிப்படையில், 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.  இந்த நிலையில் … Read more

சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது: மாலத்தீவு அரசு வழங்கியது

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் ஐகான் விருதை மாலத்தீவு அரசு வழங்கியுள்ளது .2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மேலும் 4 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரெய்னா, ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.  சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி … Read more

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம்; இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னிட்டு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தில்  இருக்கும் சிந்து மாளிகையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவர்களுக்கு எதிராக ஆளும்கட்சி தொண்டர்கள் சிந்து மாளிகையின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாளிகையின் உள்ளே புகுந்து தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தாக்க தொடங்கினர்.  இது … Read more

அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன – குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி, அரசியல் கட்சிகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 1990 காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பயங்கரவாதத்தால் தான் நிகழ்ந்தது என்று கூறினார். தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட விவகாரத்தை குறிப்பிட்டு அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் … Read more

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. … Read more

கொரோனா குறித்த 3 தவறான தகவல்கள் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஜெனீவா, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை … Read more

உத்தரகாண்ட் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..!

டேராடூன்,  நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை பிடித்தது. ஆனாலும் அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் புதிய முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்-மந்திரி பதவிக்கு, தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமி பெயர்தான் பலமாக அடிபடுகிறது. மற்றபடி, … Read more

பெண்கள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி

ஆக்லாந்து, பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக மேடி கிரீன் 52 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்காத நிலையில் இறுதியில் அந்த … Read more

உக்ரைனில் ஆபத்து விளைவிக்கும் உயிரியல் பரிசோதனைக்கு அமெரிக்கா உறுதுணை…? ரஷியா திடுக்கிடும் குற்றச்சாட்டு

நியூயார்க், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது.  இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.  உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது. எனினும், தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் … Read more

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

கொழும்பு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்  உள்பட  24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில், இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024- ஆம் … Read more