ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 22 வரை நீதிமன்ற காவல்…!

கொழும்பு, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு … Read more

அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.  இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் … Read more

டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

மெல்போர்ன், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது, இதில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய ஏழு இடங்களில் விளையாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது.  உலகக் கோப்பைக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது, இரண்டு போட்டி நாட்களுக்கான  டிக்கெட் விற்பனைக்கு … Read more

கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நடைபெறும் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்- கனடா பிரதமர் ட்ரூடோ

ஒட்டாவா, கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.  அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் … Read more

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.  … Read more

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் நியமனம்!

லண்டன், இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் பால் காலிங்வுட், அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரை தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் … Read more

உலகின் வேகமான கேமிங் மானிட்டர்…!

பெய்ஜிங், தொழில்நுட்ப நிறுவனமான பீஜிங் ஓரியண்டல் எலக்ட்ரானிக்ஸ்(பி ஓ இ) ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் உலகின் முதல் 500 ஹெர்ட்ஸ் கேமிங் மானிட்டரை உருவாக்கியுள்ளது. இது விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்கும் என்று சீன வலைத்தளமான சினாவில் கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட மானிட்டர் முன் மாதிரியானது 27-இன்ச் முழு எச்டி பேனல் ஆகும், இது உயர் மொபிலிட்டி ஆக்சைடு பேக் பிளேனைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, இது வெறும் 1மில்லிசெகண்ட் … Read more

காஷ்மீரிகளுக்கு ஆதரவு பதிவு; மன்னிப்பு கோரியது கே.எப்.சி. இந்தியா

புதுடெல்லி, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது உணவு விடுதி ஒன்றை திறந்து இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது. அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனம் யம்! பிராண்ட்ஸ்.  பீட்சா ஹட் மற்றும் டேக்கோ பெல் ஆகிய பிரபல பிராண்டுகளுக்கும் சொந்தக்காரராக உள்ள இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கே.எப்.சி. செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கே.எப்.சி. நிறுவனம் 450 மையங்களை இயக்கி வருகிறது.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு ஒன்றில் காஷ்மீர், … Read more

பீஜிங் ஒலிம்பிக்; பயோ-பபிள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது. பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள்.வெளி உலகிலிருந்து, அதாவது பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை … Read more

சறுக்கலில் முடிந்த சாகசம்: உறைந்த ஏரியில் நூலிழையில் உயிர் தப்பிய தடகள வீரர் …!

பிராடிஸ்லாவா, 31 வயதான தடகள வீரர் போரிஸ் ஓரவேவ் பால் ஹாக்கியில் நான்கு முறை உலக சாம்பியன், ரெட் புல் ஐஸ் கிராஸ் தடகள வீரர் மற்றும் கிராஸ்-ஃபிட் விளையாட்டு வீரர். இவர் தனது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் தனது குளிர்ந்த நீர் நீச்சல் திறமையைக் காட்ட முயற்சித்தது பார்வையாளர்களை பதற்றமடைய செய்துள்ளது. போரிஸ் ஓரவேவ் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும் போது வழி திரும்பி திசை … Read more