விடாமல் குண்டு மழை பொழியும் ரஷியா ; மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்

லண்டன் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது … Read more

உக்ரைன் மீது ரஷியா போர்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி, உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனிடையே உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும்  ரஷியாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் … Read more

யுவராஜ் சிங் அனுப்பிய உருக்கமான கடிதத்துக்கு , விராட் கோலி நன்றி..!

மொகாலி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை துறந்து, புது உத்வேகத்துடன் விளையாடிவரும் ,விராட் கோலிக்கு யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றையும், பரிசு ஒன்றையும் அனுப்பினார் “விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும், உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளைஞனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று, … Read more

ரஷிய தாக்குதலில் 40 வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் பலி – உக்ரைன் அரசு அறிவிப்பு

கீவ், உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.   உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை – பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து … Read more

புரோ கபடி : பாட்னா – டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதின . இந்த போட்டியில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது  இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் … Read more

இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும் – போரிஸ் ஜான்சன்

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் சிறப்பு ராணுவ … Read more

“ஐ லவ் யூ” என கூறுவது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பதில்லை – சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

மும்பை, மும்பை வடாலா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் மீது 17 வயது சிறுமியின் குடும்பத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தனர். இதில் சம்பவத்தன்று வாலிபர் வெளியே சென்ற சிறுமியை பார்த்து கண் சிமிட்டியதுடன், அவளிடம் “ஐ லவ் யூ” என கூறியதாகவும், தட்டிகேட்ட அவரது தாயை மிரட்டியதாகவும் கூறியிருந்தனர். இதன்பேரில் அந்த வாலிபர் மீது வடாலா போலீசார் பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த … Read more

ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் போட்டி தொடரை நடத்திய இந்தியா முழு அளவில் வெற்றி பெற்றது. இதனால், ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு அமைந்தது.  இந்த தொடரில், சூரியகுமார் அதிகளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு அடுத்து வெங்கடேஷ் 2வது இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பேட்டிங் தரவரிசையில், 35வது இடத்தில் இருந்து 21வது … Read more

“ஜெர்மனியின் நாஜி படையைப் ரஷியா தாக்குதல் நடத்துகிறது” – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகள் தாக்கியது போல் உக்ரைன் மீது ரஷ்யா … Read more