ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி தன்னுடைய 7-வது … Read more

ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

டோக்கியோ, ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் சில … Read more

பிப்.14 முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் – பீகார் அரசு அறிவிப்பு

பாட்னா, பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பீகாரில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பீகாரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 14-ம் தேதி முதல் பீகாரில் அமலில் உள்ள அனைத்து விதமான கொரோனா … Read more

ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

பெங்களூரு,  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.  அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்பட 8 நாடுகளின் பயணிகள் விமானத்திற்கு ஹாங்காங் அரசு தடை

ஹாங்காங், ஹாங்காங் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் … Read more

நவம்பர் 7-ந்தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

மும்பை,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்து உள்ளார். நேற்று அவர் சட்ட மேதை அம்பேத்கரின் சொந்த ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதாவே கிராமத்திற்கு சென்றார். அங்கு ஜனாதிபதி, அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தார். மேலும் அம்பேத்கர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:- 1900-ம் ஆண்டு அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நாளை நினைவுகூறும் வகையில் மராட்டியத்தில் நவம்பர் 7-ந்தேதி மாணவர் தினமாக … Read more

புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 31-32 என்ற புள்ளிகள் கனக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் … Read more

பல கோடி ஆண்டுகள் பழமையான கருப்பு வைரம் ரூ.32 கோடிக்கு ஏலம்…!

லண்டன், 555 காரட்கள் கொண்ட “தி எனிக்மா” என்று அழைக்கப்படும் கருப்பு வைரம் பல கோடி  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் அல்லது சிறுகோள் பூமியைத் தாக்கியபோது  உருவானதாக நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட இந்த வைரம் லண்டனில் கடந்த புதன்கிழமை ரூ.32 கோடிக்கு ஏலம் விடப்பட்டது 555.55 காரட், 55 முகங்கள் கொண்ட வைரமானது லண்டனின் புகழ்பெற்ற சோத்பியின் ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆன்லைன் ஏல விற்பனையில் விற்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனம் கூறுகையில், … Read more

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 15, 16-ந் தேதிகளில் விசாரணை

புதுடெல்லி,  வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வருண் கே.சோப்ரா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி, இருதரப்பு சார்பிலும் முன்வைக்கப்படவுள்ள வாதங்களை எழுத்துப்பூர்வமாக தொகுத்து ஆவணங்களாக தாக்கல் செய்துள்ளோம். இரு தரப்புக்கும் இந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை காலஅவகாசம் வேண்டும். இந்த விவகாரத்தில் 31 … Read more

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா, புனேரி பால்டன் அணிகள் வெற்றி..!

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 41-34 என்ற புள்ளி … Read more