மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு சிறப்பான பந்துவீச்சு… டெல்லி 141 ரன்களில் ஆல் அவுட்

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி … Read more

உக்ரைன் அமைதிக்காக… டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பேச்சு – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

பாரீஸ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரானது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் … Read more

புதிய தலைமை தேர்தல் ஆணையர்: யார் இந்த ஞானேஸ்குமார்?

புதுடெல்லி, இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் உள்ளார். தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் உள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) அவர் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் … Read more

ஒருநாள் கிரிக்கெட்: வரலாற்றில் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு பெரும் பங்களித்த அவர், 2015-ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இருப்பினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரது … Read more

தைவான் ஜலசந்தியில் கனடா போர்க்கப்பல்: கண்டனம் தெரிவித்த சீனா

தைபே நகரம், தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததை நேற்று சீன இராணுவம் கண்டித்தது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் இதேபோன்ற பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் அந்த கப்பலை கண்காணித்து எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையும், எப்போதாவது கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களும், சர்வதேச நீர்வழியாகக் கருதும் இந்த ஜலசந்தியை மாதத்திற்கு ஒரு முறை கடந்து செல்கின்றன. தைவானும் இதை ஒரு சர்வதேச நீர்வழியாகக் … Read more

பீகாரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

பாட்னா, டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பீகாரிலும் ஏற்பட்டது. ஒரே நாளில் இந்தியாவில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். … Read more

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்; 9 பேர் பலி

கென்டகி, அமெரிக்காவில் சக்தி வாய்ந்த குளிர்கால சூறாவளி தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் பலர் சிக்கி கொண்டனர். கென்டகியில் 8 பேர் உள்பட இதுவரை மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார். சூறாவளி … Read more

திருப்பதி தேவஸ்தானம்: சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

திருப்பதி, திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணிக்கே நடைபாதை மூடப்படும் என்று அறிவித்து தேவஸ்தானம், பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி வழியாக நடை பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபிரியில் இருந்து நடைபாதையின் 7வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: முடிவுக்கு வருகிறதா ரோகித் சர்மாவின் கெரியர்..? வெளியான தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக … Read more