அன்று கையில்.. இன்று தரையில்.. 2 முறை அபராதம் பெற்றும் அடங்காத திக்வேஷ் ரதி

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் அடித்தனர். … Read more

காங்கோவில் கனமழை, வெள்ளம்; 33 பேர் பலி

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , பலர் படுகாயமடைந்துள்ளனர். கின்ஷாசாவில் உள்ள 13 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், … Read more

உ.பி.யில் மற்றொரு கொடூரம்: அரசு வேலைக்காக கணவரை கொன்ற காதல் மனைவி

பிஜ்னோர், உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் முக்ராந்த்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தீபக் குமார் (வயது 29). இவர் காதலித்து வந்த ஷிவானி (வயது 27) என்பவரை 2023-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நஜிபாபாத்தில் வசித்து வந்தனர். தீபக் சி.ஆர்.பி.எப்.பில் பணியாற்றி, பின்னர் ரெயில்வேயில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சி ஒன்று … Read more

பிரியன்ஷ் ஆர்யா அதிரடி சதம்… சென்னைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முல்லான்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக … Read more

பதிலடி வரி விதித்த சீனா மீது கோபத்தில் டிரம்ப் விதித்த கூடுதல் வரி

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்காள தேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 … Read more

ராம நவமி: வாழை இலையில் வரையப்பட்ட அயோத்தி பாலராமர்

அமராவதி, மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி ஆகும். அதில் 7-வது அவதாரமாகக் கருதப்படும் ராமா், நவமி திதியில் பிறந்தாா். அவரின் அவதார தினமான ராம நவமி விழாவை பக்தர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் புருஷோத்தமன் என்பவர் வாழை இலையில் அயோத்தி பாலராமர் உருவத்தை வரைந்து அசத்தி … Read more

சார்லஸ்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கலிபோர்னியா, பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெகுலா 6-2, 2-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இறுதிப்போட்டியில் சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோத உள்ளார். தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

ஸ்கூட்டரை வழிமறித்து நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசவாடி ஹெண்ணூர் மெயின் ரோட்டில் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் தனது தோழி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஸ்கூட்டரை மர்மநபர்கள் வழிமறித்தனர். பின்னர் 2 மர்மநபர்களும், நடுரோட்டில் வைத்து ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணின் உடலை தொட்டு சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை … Read more

மும்பை அணியுடன் இணைந்த பும்ரா… ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார். காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் … Read more

பீகார்: கார் – லாரி மோதி விபத்து – 4 பேர் பலி

பாட்னா, பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரமோத் சிங், அவரது மகன் … Read more