தென் ஆப்பிரிக்கா: ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க முயன்ற 4 பேர் கைது

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 3½ ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனை எதிர்த்து போரிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்களை ரஷியா ஈடுபடுத்தியது. இது தவிர தென் ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகளில் இருந்தும் ரஷிய ராணுவத்தில் வீரர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷியாவுக்கு ஆதரவாக போரிட சென்ற 17 தென் ஆப்பிரிக்கர்கள் உக்ரைனில் சிக்கி கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகன் ஜுமா-சம்புட்லா எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக … Read more

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கி (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார். பின்னர் வெங்கி, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல், அவர் பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் … Read more

முதல் ஒருநாள் போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

ராஞ்சி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் … Read more

ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு

ஹாங்காங், ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில்சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி … Read more

பிறரின் முதுகில் குத்துபவன் நான் அல்ல – டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடகத்தில் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே நான் உள்ளிட்ட தலைவர்களின் நோக்கமாகும். நான் டெல்லிக்கு சென்றபோது 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றிருக்கலாம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னுடன் எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வது பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான் 140 எம்.எல்.ஏ.க்கள் இடையே பாரபட்சம் … Read more

சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி

லக்னோ, சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குணவன் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜேசன் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் 16-21, 21-8 மற்றும் 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 1 More update … Read more

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 70,100 ஆக உயர்வு

காசா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணய கைதிகளை இஸ்ரேல் மீட்டது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து … Read more

போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்

புதுச்சேரி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு ‘சன் பார்மசி’ என்ற பெயரில் மாத்திரை நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைக்கு ‘சீல் வைத்தனர். அங்கு ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் … Read more

முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’

ராவல்பிண்டி, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்னில் அடங்கியது. கமில் மிஷரா (59 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என … Read more