பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: டொனால்டு டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது டொனால்டு டிரம்ப் பேசியதாவது: – இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள். பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு … Read more

பா.ஜனதா ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறதா? நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு நிதி மந்திரி பதிலளித்து வருகிறார். அந்த வகையில் நேற்று மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, ‘மத்திய பட்ஜெட்டில், பா.ஜனதா ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன திமுக எம்.பிக்கள் என, குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது;- மத்திய பட்ஜெட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பா.ஜனதா ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை. புறக்கணித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாத … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மேலும் … Read more

இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி

வாஷிங்டன், பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்கள் எனக்கு … Read more

தலாய்லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. .இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி தலாய் லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, அவருக்கு சிஆர்பிஎப் படையினரால் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்திருப்பதக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலாய் லாமாவுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 30 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தினத்தந்தி Related Tags … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பி.சி.சி.ஐ.

மும்பை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது முதல் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது, இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. டிரம்பின் இந்த அதிரடிகள் இந்தியாவையும் பாதித்து உள்ளன. குறிப்பாக டிரம்பின் உத்தரவின்பேரில் சட்ட விரோதமாக … Read more

மணிப்பூரில் 2 வீரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சிஆர்பிஎப் வீரர் தற்கொலை

மணிப்பூரின் மேற்கு இம்பாலில் நேற்று இரவு 8 மணிக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர், சக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் மரணமடைந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சக சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர், துப்பாக்கி சூடு நடத்திய சி.ஆர்.பி.எஃப் காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் இப்படி ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்…? தலைமை பயிற்சியாளர் பதில்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கின்றன: டிரம்ப் ஆதங்கம்

வாஷிங்டன், அமெரிக்க பொருட்கள் மீது நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதி வரி பொருட்களுக்கு, அந்த நாடு எவ்வளவு வரியை அமெரிக்க பொருட்கள் மீது விதித்ததோ அதற்கு நிகராக அமெரிக்காவும் இறக்குமதி வரியை விதிக்கும். இதற்கான சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டொனால்டு டிரம்ப், நட்பு நாடுகளே அமெரிக்கவிற்கு எதிராக இருப்பதாகவும் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடபாக டிரம்ப் கூறுகையில், இந்தியாவில் வணிகம் செய்ய எலன் … Read more