மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவை, புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம். ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு மாசி … Read more

புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம் அணியை எதிர்த்து மோதுவதாக இருந்தது. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து … Read more

பிலிப்பைன்ஸ்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- 8 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் … Read more

தாயை திட்டியதால் ஆத்திரம்…மரக்கட்டையால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

நாக்பூர், மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கோந்தாலி நகரை சேர்ந்தவர் அன்ஷுல் என்ற கவுரவ் பாபராவ் ஜெய்ப்பூர்கர் (19). இவர் அப்பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக பணிப்புரிந்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் அன்ஷுல் மதிய உணவுக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அன்ஷுலில் தந்தை பாபராவ் மதுகர் ஜெய்ப்பூர்கருக்கும் (52) அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மதுகர் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்ஷுல் ஒரு மரக்கட்டையை எடுத்து தனது தந்தையின் … Read more

பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ராவல்பிண்டியில் … Read more

ஐநா மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி

ஜெனிவா, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. எனினும், காஷ்மீர் பிரச்சினையில் தேவையின்றி மூக்கை பாகிஸ்தான் நுழைத்து வருகிறது. அதிலும் ஐநா போன்ற சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும் பாகிஸ்தான் அதற்கான விலையையும் கொடுத்து வருகிறது. ஆனாலும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய … Read more

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் இந்தியாவுக்கு வருகை; மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி

புதுடெல்லி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்களும் ஒரு குழுவாக வருகை தந்துள்ளனர். இதன்பின்னர் அவர், டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உலக அமைதிக்காக மகாத்மா கூறிய விசயங்களை அவர் அப்போது நினைவுகூர்ந்து பேசினார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவு … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுவதாக இருந்தன. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து … Read more

இதற்காகவா நாங்கள் போராடுகிறோம்..? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்புக்கு ஹமாஸ் கண்டனம்

காசா: காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், காசாவை கைப்பற்றி மேம்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘காசாவை அமெரிக்கா வாங்கிக்கொள்ளும். அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவோம். வீடு கட்டித்தருவோம். காசா புனரமைக்கப்பட்ட பின் பாலஸ்தீனர்கள் உட்பட … Read more

தேர்தல் ஆணையம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவேன் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு பாஜக … Read more