அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் தங்க அட்டை.. முதலீட்டாளர்களை ஈர்க்க டிரம்ப் புதிய திட்டம்
வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலீட்டாளர் விசாவுக்கு பதிலாக தங்க அட்டை (கோல்டு கார்டு) வழங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருவாயை அதிகரிக்கவும், நிதி பற்றாக்குறையை சரி செய்யவும் இந்த புதிய சலுகையினை அவர் அறிவித்து இருக்கிறார். … Read more