நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

காத்மண்டு, நேபாள நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. அந்நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related … Read more

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா [தென் ஆப்பிரிக்கா], ஜோனதன் டிராட் (இங்கி.,] ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்யும். … Read more

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

மும்பை, சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். அப்போது, … Read more

எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? லக்னோ அணியுடன் இன்று மோதல்

லக்னோ, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று … Read more

பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில கவர்னராக பதவி வகித்து வருபவர் ஜோஷ் ஷபிரோ (வயது 51). ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவரான இவரது அதிகாரப்பூர்வ இல்லம் ஹாரிஸ்பர்க் நகரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கவர்னரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் தீ வைத்துள்ளார். தீ மளமளவென வீட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. அப்போது கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை … Read more

இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

Live Updates 2025-04-14 04:03:33 14 April 2025 5:06 PM IST விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 14 April 2025 4:57 PM IST பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், டாக்டர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி திலகபாமாவிற்கு ஒன்றும் தெரியாது. கட்சியை அழிப்பதற்காக வெளியில் … Read more

பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் பியாஸ்ட்ரி முதலிடம்

சாகிர், இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சாகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோமீட்டராகும். இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெக்லரன் அணி வீரரான ஆஸ்கர் பியாஸ்ட்ரி (ஆஸ்திரேலியா) 1 மணி 35 நிமிடம் 39.435 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் … Read more

சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து

பீஜிங், சீன தலைநகர் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. எனவே விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கு 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ரெயில் மற்றும் சாலை … Read more

யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது

சூரத், குஜராத் மாநிலம் சூரத்தில் யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கோட்டில் வசிக்கும் ஜெயேஷ்பாய் என்பவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் தங்குவதற்காக சூரத்துக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தனர். அவர்களை பாரத்பாய் கண்டித்துள்ளார். இதற்கு அந்த சிறுவர்கள் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டினர். இதில் ஆத்திரமடைந்த … Read more

கரண் சர்மா அபாரம்: டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – ரிக்கல்டன் களமிறங்கினர். நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலாவது அசத்துவாரா? என்று எதிர்பார்த்து … Read more