சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கெய்ரோ, சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகில் உள்ள நகரமான ஓம்டுர்மனுக்கு வடக்கே வாடி சயீத்னா விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது அன்டோனோவ் விமானம் விபத்துக்குள்ளானது என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஆயுதப்படை வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை. இந்நிலையில் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஓம்டுர்மனில் உள்ள கர்ராரி மாவட்டத்தில் உள்ள ஒரு … Read more

மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி, மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு … Read more

சாம்பியன்ஸ் டிராபி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 53 பேர் பலி

கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த … Read more

கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன.. எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், … Read more

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டால் என்ன ஆகும்? – அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு

பெர்த், சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதேபோல், செவ்வாய் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு மீண்டும் நேர்ந்த கொடூரம்; கான்ஸ்டபிள் கைது

பெங்களூரு, கர்நாடகாவில் வசித்து வரும் 17 வயது இளம்பெண்ணுக்கு விக்கி என்ற நபருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, தன்வசப்படுத்தி அந்த இளம்பெண்ணை, விக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அவரை அடித்து, தாக்கியும் உள்ளார். இந்த விவரம் பற்றி தெரிய வந்ததும், இளம்பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அருண் என்பவர், குற்றம் சாட்டப்பட்ட விக்கியுடன் … Read more

பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் – வங்காளதேச கேப்டன்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

இந்தியாவை தோற்கடிக்காமல் விடமாட்டேன்: பாகிஸ்தான் பிரதமர் சூளுரை

இஸ்லமபாத், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.நான் நவாஸ் ஷெரீபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை … Read more