மருத்துவர்கள், செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது சமூக அநீதி: அன்புமணி

சென்னை: மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்றும், அங்கு மருத்துவம் அளிப்பதற்காக மாதம் ரூ.60,000 ஊதியத்தில் … Read more

மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சட்டப்பேரவையில் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உரையாற்றினார். அப்போது அவர், “இந்தக் கூட்டத்தொடர் வெறும் சட்டமன்ற சம்பிரதாயம் மட்டுமல்ல, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். ஜம்மு காஷ்மீர் மக்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்று … Read more

ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு” என குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோரை ஜெலன்ஸ்கி … Read more

நாகை: பொதுத்தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து

நாகை: நாகையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி … Read more

2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்? – தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர்பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்​கஞ்ச் பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிண​மூல் காங்​கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்​டினர். இதன் மூலம் போலி வாக்​காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்​காளர்கள் மே.வங்கத்​தில் உள்ளதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்​டி​னார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது. அதில்கூறி​யிருப்​ப​தாவது: இரண்டு … Read more

“தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்!” – கோவை திமுக மேயரை மிரட்டும் கூட்டணிக் கட்சிகள்

திமுக-வுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று இப்போது உள்ளாட்சி அளவில் கூட்டணிக் கட்சிகளும் ஆங்காங்கே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணம், அண்மையில் கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது. கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வழக்கம் போல் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், … Read more

ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேசில் உடல் மீட்பு – நடந்தது என்ன?

சண்டிகர்: ஹரி​யானா காங்​கிரஸ் பெண் நிர்​வாகி ஹிமானி நர்வால் மர்மமான முறை​யில் கொலை செய்​யப்​பட்டு உள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே வீசப்​பட்​டிருந்த சூட்​கேசில் இருந்து அவரது உடல் மீட்​கப்​பட்​டது. ஹரியானா​வின் ரோத்​தக், விஜய் நகர் பகுதியை சேர்ந்​தவர் ஹிமானி நர்வால் (22). சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்​கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். முன்​னாள் முதல்வர் பூபிந்தர் ஹுடா​வின் ஆதரவாளராக​வும் கட்சி​யின் இளம் நிர்​வாகி​யாக​வும் அவர் அறியப்​பட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு காங்​கிரஸ் மூத்த … Read more

அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது. அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று … Read more

ரமலான் நோன்பு தொடங்​கியது: மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை: ரமலான் நோன்பு நேற்று தொடங்​கியதையொட்டி, மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்​தினர். இஸ்லாமியர்​களின் 5 முக்கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்​கு​வதற்கான பிறை பிப்​.28-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை), சென்னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட​வில்லை. எனவே, மார்ச்​.2-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) ரமலான் நோன்பு தொடங்​கு​கிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்​தார். இதைத்​தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்​கியது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு … Read more

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை

புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு … Read more