2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்? – தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர்பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்​கஞ்ச் பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிண​மூல் காங்​கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்​டினர். இதன் மூலம் போலி வாக்​காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்​காளர்கள் மே.வங்கத்​தில் உள்ளதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்​டி​னார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது. அதில்கூறி​யிருப்​ப​தாவது: இரண்டு … Read more

“தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்!” – கோவை திமுக மேயரை மிரட்டும் கூட்டணிக் கட்சிகள்

திமுக-வுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று இப்போது உள்ளாட்சி அளவில் கூட்டணிக் கட்சிகளும் ஆங்காங்கே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணம், அண்மையில் கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது. கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வழக்கம் போல் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், … Read more

ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேசில் உடல் மீட்பு – நடந்தது என்ன?

சண்டிகர்: ஹரி​யானா காங்​கிரஸ் பெண் நிர்​வாகி ஹிமானி நர்வால் மர்மமான முறை​யில் கொலை செய்​யப்​பட்டு உள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே வீசப்​பட்​டிருந்த சூட்​கேசில் இருந்து அவரது உடல் மீட்​கப்​பட்​டது. ஹரியானா​வின் ரோத்​தக், விஜய் நகர் பகுதியை சேர்ந்​தவர் ஹிமானி நர்வால் (22). சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்​கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். முன்​னாள் முதல்வர் பூபிந்தர் ஹுடா​வின் ஆதரவாளராக​வும் கட்சி​யின் இளம் நிர்​வாகி​யாக​வும் அவர் அறியப்​பட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு காங்​கிரஸ் மூத்த … Read more

அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது. அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று … Read more

ரமலான் நோன்பு தொடங்​கியது: மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை: ரமலான் நோன்பு நேற்று தொடங்​கியதையொட்டி, மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்​தினர். இஸ்லாமியர்​களின் 5 முக்கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்​கு​வதற்கான பிறை பிப்​.28-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை), சென்னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட​வில்லை. எனவே, மார்ச்​.2-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) ரமலான் நோன்பு தொடங்​கு​கிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்​தார். இதைத்​தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்​கியது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு … Read more

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை

புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு … Read more

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம்

டெல் அவிவ்: ​காசாவுக்கு செல்​லும் உதவிப் பொருட்​கள் விநி​யோகத்தை இஸ்ரேல் நிறுத்​திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் தீவிர​வா​திகள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர். பாலஸ்​தீனத்​தில் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இஸ்ரேலுக்​கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்​டது. அதன்​பிறகு இரு தரப்​பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்​கப்​பட்​டனர். முதல்​கட்​டமாக மேற்​கொள்​ளப்​பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்​கிழமை முடிவடைந்​தது. அதற்கு முன்ன​தாகவே 2-ம் கட்ட சண்டை நிறுத்தம் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் தீவிர​வா​திகள் அறிவித்​தனர். பதில் இல்லை: … Read more

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

சென்னை: மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது. நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. நேற்று மேலும் ஒருவரது உடல் … Read more

உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை

வாஷிங்டன்: உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக நிறுத்தி வந்தார். இந்த சூழலில் … Read more