அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

அமிர்தசரஸ்: மலேசியாவில் இருந்து பஞ்சாப் வந்த விமான பயணியிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த மன்தீப் சிங் என்ற பயணியிடம் கடந்த 26-ம் தேதி சோதனையிடப்பட்டது. அவர் கொண்டுவந்த பையில் 8.17 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பயணி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது … Read more

தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்த 42 நிர்வாகிகளிடம் கருத்துகேட்ட மேலிட பொறுப்பாளர்

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸை வலிமைப்​படுத்துவது குறித்து கட்சி​யின் 42 நிர்வாகிகளிடம் காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்​தனியே கருத்துகளை கேட்​டறிந்​தார். தமிழ்​நாடு காங்​கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட மாவட்ட காங்​கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்​.​திர​வியம் தலைமை​யில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்​வப்​பெருந்​தகையை மாற்​றக்​கோரி கட்சி​யின் தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்​தனர். இந்நிலையில், தமிழ்​நாடு காங்​கிரஸின் மேலிட பொறுப்​பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று … Read more

கேரளாவில் மாணவர்கள் இடையிலான மோதலில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், தமரசேரி நகரில் ஒரு தனியார் டியூஷன் சென்ட்டர் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று நடனமாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின்போது, தற்காப்புக் கலைக்கு பயன்படுத்தப்படும் நன்சுக் (கயிறால் இணைக்கப்பட்ட … Read more

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசுவது மோசடியானது: ஹெச்.ராஜா விமர்சனம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் எதுவும் சொல்லாதபோது, அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது மோசடியானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இல்லாத பிரச்சினையை, கற்பனையாக மக்களிடையே புகுத்தி, மாநிலத்தை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் 25-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது நேரு மற்றும் ஜின்னாவின் தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாகbs இந்தியா, பாகிஸ்தான் … Read more

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: பழனிசாமி குற்றச்சாட்டு

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு தலைவர்களை முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான். இதனால், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு … Read more

ம.பி.யில் பறவைக் காய்ச்சலால் 21 நாட்களுக்கு சந்தை மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியிலுள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த பறவைகள், பூனைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அங்கிருந்த 3 பூனைகள், பறவைக்கு ஏவியன் இன்ப்ளூயன்சா (எச்பிஏஐ) எனப்படும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலானது கடந்த 2022-ல் அமெரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் … Read more

கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள் 

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக வனப்பகுதியில் சில இடங்களில் தீபற்றியும் எரிந்தது. கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியது என்று எண்ணிய நிலையில், கடந்த இருதினங்களாக மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்யத்துவங்கி குளுமையான சூழல் நிலவியது. இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது, இதன் காரணமாக எதிரே … Read more

மகாராஷ்டிரா யாத்திரையில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸார் வழக்குப் பதிவு

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷா காட்சே ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.03) வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, “ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் … Read more

இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தலா? – விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுக்கு தவெக கண்டனம்

சென்னை: இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை காரணம் காட்டி அவர் பாதுகாப்புப் பெற்றதாகவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி தவெக தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் வன்னியரசுக்கு தவெக சார்பில் … Read more