தப்புக்கணக்கு போட்டுவிட்டார் புடின்… பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாபதி புடின் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டமாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது 6வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை குவித்து வந்தபோது, உலக நாடுகளை நெருக்கடிக்கு தள்ளும் ஒரு சூழல் ஏற்படாது என்றே உலக நாடுகள் நம்பி வந்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் ரஷ்யாவின் நகர்வுகளை கண்காணித்து வந்ததுடன், அதை வெளிப்படையாக அறிவித்தும் வந்துள்ளது. … Read more

ஜெலன்ஸ்கியின் விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய நாடாளுமன்றம்! உக்ரைனுக்கு ஆதரவாக தொடங்கியது சிறப்பு நடைமுறை

 ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விடுத்திருந்து கோரிக்கையை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கான சிறப்பு சேர்க்கை நடைமுறை தொடங்கியுள்ளது. இதன் போது காணொளி காட்சி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உரையாற்றினார். ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் நிற்பதை நிரூபிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். ஐரோப்பிய … Read more

மார்ச் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில…

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் இரண்டு டோஸ்களுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்க போனஸ் மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த பணவீக்க போனஸை பெறத் தகுதியுடையவர்கள். … Read more

இந்தியர்களை மட்டும் குறிவைத்து தாக்கும் உக்ரைன் மக்கள்! காரணம் இதுதான்… அதிர்ச்சி விலகாமல் பேசிய தமிழர்

உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்ட நிலையில் அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவர் பாலமுருகன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்து பேசியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கார்கிவ்வை விட்டு வெளியேற ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழரான … Read more

உக்ரைன்- ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு? தனது நிலைப்பாட்டை அறிவித்தது ஈரான்

 மத்திய கிழக்கு நாடான ஈரான், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியதாவது, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளில் இருந்து தான் உக்ரைன் நெருக்கடி உருவானது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு மூலம் அமெரிக்கா உக்ரைனை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. உக்ரைன் அமெரிக்காவின் கொள்கையால் பாதிக்கப்பட்டது. … Read more

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரிடமே பிக்பாக்கெட் அடித்த பலே திருடன்

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தானே ஷாப்பிங் செல்பவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். சென்ற வாரம் அவர் அப்படி ஷாப்பிங் சென்றபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, மெர்க்கல் பெர்லினிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். தனது கைப்பையில் தனது பர்ஸை வைத்திருந்த மெர்க்கல், அந்த கைப்பையை, பொருட்களை வைத்திருக்கும் ட்ராலியில் தொங்கவிட்டபடி ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது யாரோ ஒரு மர்ம … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளை எச்சரித்துள்ள புடின்!

உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு என புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது. இதனிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்து. பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது பொதுவான உடன்படிக்கை எட்டக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய குழுவின் தலைவர் … Read more

மகா சிவராத்திரி நாள் அன்று கோடி அதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்று பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW            … Read more

ரூ.20,000-க்கு புதிய ஆப்பிள் iPhone! கசிந்த தகவல்

Apple நிறுவனம் இந்திய பணமதிப்பில் ரூ.20,000க்கு குறைவான விலையில் iPhone அறிமுகம் செய்ய உள்ளதாக் அத்தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள iPhone SE 2022 அல்லது iPhone SE 3 என்ற புதிய மாடலின் விலை குறித்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் மார்ச் 8-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐஃபோனின் விலை 200 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று Apple நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் … Read more

உக்ரைனுக்கு உதவி., ரஷ்யாவுக்கு தடை: கனடா அதிரடி நடவடிக்கை!

கனடா உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கவுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்கிறது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக கனடா, உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைனின் வீரமிக்க பாதுகாப்புக்கு கனடா … Read more