12 ரஷ்ய ஐ.நா தூதர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!

ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதரகப் பணியை சேர்ந்த 12 பேர் மார்ச் 7-ஆம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக உலக அமைப்பிற்கான ரஷ்யாவின் தூதர் தெரிவித்தார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா டால்டன் கூறுகையில், வெளியேற உத்தரவிடப்பட்டவர்கள் “நமது தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அமெரிக்காவில் தங்களுடைய சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் ஐநா தலைமையக ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கை பல மாதங்களாக வளர்ச்சியில் உள்ளது” … Read more

ரஷ்யா, உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை முடிவு., 2-ஆம் சுற்று திட்டம்: வெளியான சமீபத்திய தகவல்கள்

திங்கட்கிழமை மாலை பெலாரஷ்ய எல்லையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் அனைத்து ரஷ்ய படைகளையும் தனது எல்லையில் இருந்து பின்வாங்குமாறு கோரியுள்ளது. தற்போது இரு நாடுகளும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. 1, “சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த உக்ரைன் தரப்புடனான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளன. நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து விடயங்களையும் நாங்கள் விரிவாக விவாதித்தோம், மேலும் பொதுவான நிலைகளை நாங்கள் கணிக்கக்கூடிய சில பொதுவான புள்ளிகளைக் கண்டறிந்தோம்” என்று … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முறைப்படி கோரிக்கை! புகைப்படம் வைரல்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்செலென்ஸ்கி, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைப்பதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில்,இன்று மாலை இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின. இதனிடையே, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முறைப்படி கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கையெழுத்திடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வோலோடிமிர் செலென்ஸ்கி, “எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக … Read more

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அதே தடைகளை சுவிஸ் விதிக்கும்! ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அதே தடைகளை சுவிஸ் விதிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி Ignazio Cassis அறிவித்துள்ளார். இதுதொடர்பில் சவிஸ் அராசங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவத் தலையீட்டைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளின் தொகுப்புகளை ஏற்றுக்கொள்ள பெடரல் கவுன்சில் பிப்ரவரி 28 அன்று முடிவு எடுத்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், … Read more

நன்றாக தூக்கம் வரவேண்டுமா?அப்போ தினமும் இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்

பொதுவாக தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. அதிலும் தூக்கம் கெடுவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை காரணியாக மாறுகிறது. இதனை எளியமுறையில் நீக்க முந்திரி பால் உதவுகின்றது.  முந்திரி பாலை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எப்படி எடுத்து கொள்ளலாம் … Read more

பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!

பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனிடையே நேற்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ரஷ்யாவுக்குச் சொந்தமான, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் … Read more

தாயகம் திரும்பிய இந்தியர்கள்…விமானம் கீழே விழுந்து கோர விபத்து! இந்திய செய்திகள்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்டு முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்தது. தெலுங்கானாவில் சிறிய ரக பயிற்சி விமானம் வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர்.  மகாராஷ்டிராவில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் … Read more

உக்ரைன் ஜனாதிபதியின் உரையை மொழிபெயர்க்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுத ஜேர்மன் செய்தியாளர்

நேற்று உலகின் பல பகுதிகளில் தேவாலயங்களுக்குச் சென்றவர்கள், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அந்த அளவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். இந்நிலையில், போர் குறித்த செய்திகளை வாசிக்கும் செய்தியாளர்கள், செய்திகளை மொழிபெயர்ப்போர், என பல தரப்பினரும் உக்ரைன் செய்திகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுவதைக் காட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky … Read more

உக்ரைனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: இணையத்தில் பரவும் வீடியோ காட்சிகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் கனல்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக ஷேஹினி எல்லை பகுதிக்கு வந்த இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குவதல் நடத்துவதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே இன்று ஐந்தாவது நாளாக போர் தொடரும் நிலையில், பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் … Read more

துணிச்சலாக ரஷ்ய டாங்குகளை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கும் உக்ரைன் குடிமக்கள்: ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

உக்ரைன் நாட்டுக் குடிமக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் நிரூபித்தவண்ணம் உள்ளன. போருக்காக சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்த பெண்மணிகள் வரை ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், ஒற்றை ஆளாக துணிச்சலாக ரஷ்ய இராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலும், எல்லை பாதுகாப்புப் படையில் இணையும் பெண்கள் என, தொடர்ந்து, சற்றும் அஞ்சாமல் தாங்கள் புடினைக் கண்டு அஞ்சவில்லை என நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் … Read more