கனடாவுக்கு புலம்பெயர்ந்த இளம்தம்பதி கைக்கு வந்த பல கோடி பணம்! சொந்த நாட்டுக்கு செல்லப்போகும் மகிழ்ச்சி

கனடாவுக்கு புலம்பெயர்ந்துசாதாரண நிலையில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் பரிசு பணத்தை எடுத்து சென்று தங்கள் சொந்த நாட்டில் வீடுகளை வாங்கவுள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் வசிக்கும் தம்பதி Emma மற்றும் Seabata Makhakhe. இந்நிலையில் தாங்கள் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா என்பதை Seabata பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி ரூ. 7,97,83,989.05 (இலங்கை மதிப்பில்) விழுந்ததை அவர் கண்டுபிடித்தார். பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியில் … Read more

100 மைல் வேகத்தில் தாக்கவுள்ள புயல்., பிரித்தானியாவுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!!

சுமார் 100 மைல் வேகத்தில் வீசக்கூடிய காற்றுடன் யூனிஸ் புயல் தாக்கவுள்ளதால் பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் யூனிஸ் புயல் (Storm Eunice) 100 மைல் வேகத்தில் பிரித்தானியாவை தாக்கவுள்ளது. வானிலை அலுவலகம் ஒரு அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், பள்ளிகள், ரயில்கள் மற்றும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கூறினார். … Read more

ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – இருவர் மரணம்., பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜேர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Baden-Württemberg மாநிலத்தில் உள்ள கிர்ச்ஹெய்மில் ஸ்டட்கார்ட்டில் இருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள Kirchheim அண்டர் டெக் என்ற இடத்தில் உள்ள ஷாப்பிங் சென்டரில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் நடக்க, அவ்வழியே சென்றவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டதில் பயந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து … Read more

சுவிட்சர்லாந்தில் 8,000 பேர் வீடுகளை இழக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்

ஃபெடரல் ஹவுசிங் ஆஃபீஸின் (OFL) சமீபத்திய அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தில் 2,200 வீடற்ற குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் மேலும் 8,000 பேர் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் ஆசிரியர்கள், 22 மாநிலங்களில் உள்ள 616 நகராட்சிகளில் இருந்து தகவல்களைத் தொகுக்க சேகரித்தனர். இந்த 616 நகராட்சிகள் சுவிட்சர்லாந்தின் மொத்தத்தில் 28% ஆக்கிரமித்துள்ளன. அதிகப்படியான செலவு, கடன், போதைப்பொருள் மற்றும் இடம்பெயர்வோடு தொடர்புடைய சமூக காரணிகள் ஆகியவை வீடற்ற தன்மைக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆய்வில் மேற்கோள் … Read more

பிரித்தானிய பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானிய பள்ளிகள் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும், ஒருசார்புடைய கற்பித்தலைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. புதிய வழிகாட்டுதலின் கீழ், பிரித்தானிய பள்ளிகள் மாணவர்களுக்கு உணர்ச்சிகரமான பிரச்சினைகளை பக்கச்சார்பற்ற முறையில் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் போன்ற சிக்கலான தலைப்புகளை ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கல்விச் செயலாளர் நதீம் ஜஹாவியின் கூற்றுப்படி, எந்தவொரு பாடமும் வரம்பற்றதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

'அடுத்த சில நாட்களில்' உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியம் – ஜோ பைடன்

அனைத்து அமெரிக்க துருப்புகளையும் திரும்பபெறவேண்டும் என புடின் கோருவதால், ‘அடுத்த சில நாட்களில்’ உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியம் என்று ஜோ பைடன் கூறுகிறார். ரஷ்யா தாக்குதல் நடத்த ஒரு சாக்குப்போக்கை உருவாக்க முயற்சிப்பதாக கூட்டாளிகள் எச்சரித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்துவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். வியாழன் அதிகாலை வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், உக்ரைனுடனான … Read more

உக்ரைனுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை! எதிர்வினையாற்ற தயாராகும் அமெரிக்கா

 உக்ரைன் உடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் Jason Rebholz மேற்கோள் காட்டி RIA இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் (டிசிஎம்) பார்ட் கோர்மனை ரஷ்யா வெளியேற்றியது. கோர்மன் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த அதிகாரி மற்றும் தூதரகத்தின் மூத்த தலைமையில் … Read more

ஒத்துழைக்காவிட்டால் ரஷ்யாவுக்கு இது தான் கதி! ஜேர்மன் எச்சரிக்கை

 உக்ரைன் உடனான பதற்றத்தை தணிக்க ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிம் என ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளையும் ஆயுதங்களையும் குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, சமீபத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்ட அதன் சில படைகள் முகாமிற்கு திரும்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், உக்ரைன் … Read more

ஒரே நேரத்தில் 20 கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு! பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து பொலிஸ் அதிரடி

தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை … Read more

முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த 14 வருடங்களாக விளையாடிய 3 நட்சத்திர வீரர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அமித் மிஸ்ரா 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான அமித் மிஸ்ரா தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, 2022ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, … Read more