டெல்லியில் புதிய தளர்வு: இனி காரில் செல்ல மாஸ்க் அணிய தேவையில்லை
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி அரசு முன்னதாக காரில் தனியாக செல்பவர்கள் மட்டும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவித்திருந்தது. மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. … Read more