ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. காங்கிரசை பின்னுக்கு தள்ளி அபார வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஆம் ஆத்மி ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விஜய் சுங்லா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர்கள் மற்றும் கொள்முதலில் ஒரு சதவீத கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. … Read more

திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூர்: தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள சி.பா. ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி ரமேஷ், துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாநில … Read more

பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை பணியில் சேர மாட்டோம் – காஷ்மீர் பண்டிதர்கள்

காஷ்மீர்: மே மாதம் 12-ந் தேதி காஷ்மீர் பண்டிதர் சமுதாயத்தைச் சேர்ந்த ராகுல் பாத் என்ற அரசு ஊழியர் அவரது அலுவலகத்தில் வைத்து  பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர்  பண்டிதர்கள் ராகுல் பாத்தின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், பள்ளத்தாக்கில் உள்ள பண்டித் இனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் இனி காஷ்மீரில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி … Read more

மக்கள் நலனை விட, வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மக்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி, மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் எரிபொருள் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் … Read more

தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

பீஜிங்: தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த … Read more

பேரறிவாளன் குற்றமற்றவர்- திருமாவளவன் பேட்டி

சென்னை: தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார். ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். பேரறிவாளனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, ‌உச்சநீதி … Read more

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொல்லம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில்  அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் இன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் … Read more

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியினர் 100 பேர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இம்ரான்கான், பிரதமர் பதவியை இழந்தார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்தக்கோரி இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டத்தை … Read more

தண்டனை காலம் முடிந்த புதுவை கைதிகளை விடுவிக்க சட்ட நடவடிக்கை- கவர்னர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஓவியம், சிற்பம் உட்பட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் … Read more

கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜே பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியா, அமெரிக்கா கூட்டு நட்புறவு நம்பிக்கையின் அடிப்படையிலானது … Read more