பாகிஸ்தானில் கொடூரம் – ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பெஷாவர் போலீசார் தேடி வருகின்றனர்.

2வது ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், … Read more

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார்.  அதன் விவரம் வருமாறு: 2018  முதல் 2020-ம் ஆண்டுக்கு இடையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். புள்ளிவிவரங்களின்படி, 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாகவும் இறந்துள்ளனர். … Read more

பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.   இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். … Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து பிப். 14 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.  இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் … Read more

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் கமி‌ஷன் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அனுமதிக்கப்படமாட்டாது. சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது. மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது. மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது … Read more

உ.பி. தேர்தல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டசபை தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி … Read more

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக வெளியேற்றம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் வழக்கறிஞராக உள்ளார். இவர், வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக தனியாகவோ அல்லது கமலா ஹாரீஸ் உடனோ அடிக்கடி பயணம் செய்வார். இந்நிலையில், டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அங்கு, திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியா, எம்ஹாஃப் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் … Read more

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு- ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் பின்னர், கைகள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி கல்லணை சாலையோரமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து திருச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் புலன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் மனைவி லதா ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த … Read more

காஷ்மீரில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய எ.ஜி.எச். என்ற இயக்கத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்கீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர லக்னோ நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதி தவ்கீத் அகமது ஷாவை தேசிய புலனாய்வு … Read more