பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற உத்தரவு… பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது… அட்டாரி எல்லையும் மூடப்பட்டது…

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து … Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை  பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில்,   தமிழகத்தில் வரும் … Read more

காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் உமர் அப்துல்லலா

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும்  நிவாரணம் அறிவித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ஒவ்வொருவரையும் நீங்கள் எந்த மதம் என விசாரித்து இந்துக்களை … Read more

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை : பாகிஸ்தான்

இஸ்லாம்பாத் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும்  தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LcT) இன் … Read more

அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவு ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம் தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ள துரைமுருகன் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். அப்போது துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் … Read more

நான் முதல்வன் திட்டம் : முதல்வருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை முதல்வர் மு க ஸ்டாலினை அவரது நான் முதல்வன் திட்டத்துக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம். அதில் உயர்கல்வியை நோக்கிய ஒரு பயணத்திட்டமான நான் முதல்வன் திட்ட போட்டி தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ள செய்தியறிந்து … Read more

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை யாரும் விற்க முடியாது, வாரிசுகளுக்கும் மாற்ற முடியாது. அவை அவர்களின் பெயரிலேயே இல்லை. பிறகு எப்படி அபகரிப்பு என்று சொல்ல முடியும்? எல்லாம் கட்டுக்கதை. பிரதமர் மோடிக்கு … Read more

நடிகைக்கு தொல்லை அளித்த்தாக முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

அமராவதி ந்டிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது கொடுத்தா புகாரில் ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு தொழில் அதிபர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதுடன், விசாரணை என்ற பெயரில் முறையான விசாரணையின்றி தன்னை கைது செய்து தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறி இருந்தார். நடிகையின் புகார் குறித்து ஆந்திர சி.ஐ.டி. போலீசார் விசாரணை … Read more

திருமண வாழ்க்கை குறித்து நடிகர் சிம்பு

சென்னை நடிகர் சிம்பு திருமண வாழ்க்கை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.’ முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்திற்கான புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ‘தக் லைப்’ படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை’ ஜம்மு காஷ்மீர்  பயங்கர வாத தாக்குதலையொட்டி தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள … Read more