அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ் அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த … Read more

நேற்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : முதல்வர் பாராட்டு

சென்னை நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று கூறியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யு.ஜி.சி. விதி என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தன. எனவே நேற்று மாலை தமிழகத்தின் உரிமைகளை … Read more

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்ர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார்.  புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்குழுவில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய … Read more

உ.பி. நடைபெறுவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘மிருத்யு கும்பமேளா’… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்…

பிரயாகராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா எந்தவித திட்டமிடலும் இன்றி தவறாகக் கையாள்வதாக பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை கடுமையாக சாடினார், மிகப்பெரிய மத நிகழ்வு “மிருத்யு கும்பமேளா”வாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். ஏழைகளுக்கு அடிப்படை சேவைகள் அனுமதிக்கப்படவில்லை என்றும், விஐபிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் பானர்ஜி கூறினார். கங்கா சாகர் மேளாவின் போது மேற்கு வங்க அரசு விஐபி கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதித்ததில்லை என்றும் அவர் கூறினார். “மகா கும்பமேளா மரணத்தை … Read more

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் விவாதம்… உக்ரைனுக்கு அழைப்பு இல்லை…

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தனர். இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் விரைவான மற்றும் பெரிய மாற்றத்தைக் குறிக்கும் பேச்சுவார்த்தைகள் என்று கூறப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய துருப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது நிலப்பகுதியை உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்து வரும் … Read more

4ல 3ல : பீகாரில் இருதார விவகாரத்தில் தீர்ப்பு… ‘முதல் மனைவியுடன் 4 நாட்கள், இரண்டாவது மனைவியுடன் 3 நாட்கள்’…

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் குடும்பம் நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பூர்ணியாவின் ருபாலி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஷா என்பவர் மீது மிர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அவரது முதல் மனைவி பூர்ணிமா, பூர்ணியா மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சங்கர் ஷா-வுக்கும் தனக்கும் … Read more

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக ஆய்வு செய்து, எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு செயல்பாட்டு அமைப்பை அதிகாரிகள் செயல்படுத்தியுள்ளனர். ராமர் கோயில் மீது ட்ரோன்கள் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. “இந்த அமைப்பு 2.5 கிமீ … Read more

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நிபுணர் உறுப்பினர் ஏ. செந்தில் வேல் ஆகியோர் அடங்கிய NGT முதன்மை பெஞ்ச், பிரயாகராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளின் தரம் குறித்த மனுவை விசாரித்தது. மகாகும்பமேளாவின் … Read more

இன்று லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக்கில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது அவ்வரிசையில் லடாக்கில் இன்று மதியம் 1.40 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 1.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 32.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.69 … Read more

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

பெங்களூரு பெங்களூரு குடிநீர் வாரியம் கோடைகால குடிநீர் பிரச்ச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. கோடை காலம் தொடங்கும் முன்பே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெப்பம் அதிகரித்துள்தால் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என  பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் … Read more