50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு

சென்னை: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், உழவர் சந்தைகளில் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இந்தாண்டு கூடுதலாக 6 … Read more

மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு வரும்; எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்! காவல்துறை வழக்கு பதிவு…

மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல மதுரையில் தவ்ஹீத் தமாஅத் அமைப்பு போராட்டம் நடத்தியது.  அதில் பேசிய  கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடைபெற்று முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதி களை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. … Read more

நிதி நெருக்கடியிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக பட்ஜெட்டை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

தமிழகஅரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதை வரவேற்கும் வகையில் கார்டூன் அமைந்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/PARI-Audio-2022-03-19-at-11.26.24-AM.ogg

10 புதிய உழவர் சந்தைகள் – 3காய்கறி வளாகம் – 3உணவு பூங்காக்கள், பனை விதைகள் – கருப்பட்டிக்கு மானியம்!

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், புதிதாக 10 புதிய உழவர் சந்தைகள்  – 3 காய்கறி வளாகம் மற்றும்  பனைமரங்களை பாதுகாக்க 10லட்சம் விதைகள் வழங்கப்படும் என்றும், கருப்பட்டி தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது. வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, விவசாயிகளிடையே காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப் பயிர் … Read more

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி – இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும்  இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்து காகிதமில்லா பட்ஜெட்டில்,  உழவுத் தொழிலே உன்னதம் என உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறியவர்,  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்துள்ளனர் நம் ஆதித் தமிழர்கள் / … Read more

இன்று வேளாண் பட்ஜெட்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் மரியாதை – வீடியோ

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் … Read more

தமிழ்நாட்டில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5 சதவிகிதம்! ஆய்வறிக்கை தகவல்…..

சென்னை: தமிழ்நாட்டி இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த  நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முழுமையான மற்றும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (18ந்தேதி) தொடங்கி 24ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் அமர்வில் மாநில நிதிநிலை அறிக்கையை  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.  இதையடுத்து ஒத்தி … Read more