கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட்.  விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம்.

கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட்.  விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம். தல சிறப்பு : இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழங்கை வரை மட்டுமே உள்ள நிலையில் அருள்பாலிப்பதும், பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்வதும் இத்தலத்தின் சிறப்பு. புருஜு என்றாள், அரசர்களின் கோட்டையில் வெளிப்பகுதி! விசாகப்பட்டினத்து அரசர்களின் குலதெய்வமாக கோட்டையின் காவல் தெய்வமாக, விளங்கியிருக்கிறாள் இந்த வீரலெக்ஷ்மி! கோபுரம், விமானம் என்று தனிப்பட்ட கோயிலுக்கு உரிய வெளி அமைப்புகள் ஏதும் இல்லை. சாலையின் நடுவில் … Read more

கோடையை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை

சென்னை கோடை காலத்தை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப … Read more

1400 கோடி ரூபாயில் மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் – சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, நசரத்பேட்டை முதல் திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டை முதல் திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கு … Read more

உக்ரைன் தலைநகரை ரஷ்யா சுற்றிவளைத்து தாக்கியதில் 8 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவு நடத்திய ஒரு பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடிய சம்பவத்தில் மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். கீவ் இராணுவ நிர்வாகம் இன்று காலை தங்களது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல் மூலம் இந்தத் துயர செய்தியை வெளியிட்டது. அதில், ரஷ்ய படைகள் தலைநகரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிநவீன … Read more

வாழ்க்கையின் சவால்களை வென்று, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிசா… ஐ.ஏ.எஸ். ஆவதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கான ஊக்கம்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், இப்போது வெளியான 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மிகவும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 40 வயதில் இரண்டு இளம் குழந்தைகளின் தாயான, செவித்திறன் குறைபாடுடன் வாழ்ந்து வரும் நிசா, முழுநேர பணியை மேற்கொண்டு வந்தபோதும், தனது ஏழாவது முயற்சியில் மதிப்புமிக்க தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சியத்தை அடைய எதுவும் தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார். அவரது ரேங்க் 1,000மாக இருப்பினும், அவர் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் இருப்பதால், … Read more

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் சென்று பார்க்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அவர் பார்வையிடுவார். ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் … Read more

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது. மேலும் எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது. காஷ்மீரில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் நாட்டினருக்கான விசாக்களை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த பாகிஸ்தான் … Read more

கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வந்துன.. தற்;போது மீண்டும் கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். தனக்கு ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பிடம் இருந்து கொலை … Read more

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறினாலும், … Read more

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி:  பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்”  என்றும்,  140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று, இன்று  பீகார்  மாநிலத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். பீகாரின் மதுபனியில் ரூ.13,480 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அத்துடன்,   சிறப்பு வகை தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதான் … Read more