வாழ்க்கையின் சவால்களை வென்று, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிசா… ஐ.ஏ.எஸ். ஆவதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கான ஊக்கம்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், இப்போது வெளியான 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மிகவும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 40 வயதில் இரண்டு இளம் குழந்தைகளின் தாயான, செவித்திறன் குறைபாடுடன் வாழ்ந்து வரும் நிசா, முழுநேர பணியை மேற்கொண்டு வந்தபோதும், தனது ஏழாவது முயற்சியில் மதிப்புமிக்க தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சியத்தை அடைய எதுவும் தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார். அவரது ரேங்க் 1,000மாக இருப்பினும், அவர் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் இருப்பதால், … Read more

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் சென்று பார்க்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அவர் பார்வையிடுவார். ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் … Read more

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது. மேலும் எந்தவொரு மூன்றாவது நாட்டிற்கும் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது. காஷ்மீரில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் நாட்டினருக்கான விசாக்களை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த பாகிஸ்தான் … Read more

கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வந்துன.. தற்;போது மீண்டும் கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். தனக்கு ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பிடம் இருந்து கொலை … Read more

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறினாலும், … Read more

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி:  பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்”  என்றும்,  140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று, இன்று  பீகார்  மாநிலத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். பீகாரின் மதுபனியில் ரூ.13,480 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அத்துடன்,   சிறப்பு வகை தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதான் … Read more

திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்துகுவிப்பு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும்,  அமைச்சர் துரைமுருகனை விடுவித்த  கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட  சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம்  அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்ததுடன், 6 மாதங்களுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்க நேற்று (ஏப்ரல் 23ந்தேதி 2025) அன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், … Read more

2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன! பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கடந்த  4 ஆண்டுகளில் 2லட்சத்து 49 ஆயிரத்து 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில்  அமைச்சர்கூறினார். தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டம், வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை … Read more

வடசென்னை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கொடுங்கையூர் எரி​யுலை​ குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஐதரா​பாத் பயணம்

சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை  பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில்,  எரி​யுலை​யால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதா என்பது  குறித்து  ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள்  தெலுங்கானா மாநிலம் ஐதரா​பாத் பயணம் மேற்கொண்டுள்ளனர். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் … Read more

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சுபமுகூர்த்த நாட்கள்  மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம்,  வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும்  சேர்த்து மொத்தம் 1230 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் … Read more