ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அமைச்சர், பொலிஸ்மா அதிபரைக் கேட்டுள்ளார். இந்தத் தாக்குதல் வெட்கப்பட வேண்டிய கடுமையான சம்பவமாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விரிவாக விசாரித்து இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றி நாட்டிற்குத் தெளிவுபடுத்த வேண்டுமென அந்த இயக்கம் கேட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு … Read more

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இன்று (14) உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ்,  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாஸர்,பி.எம்.காசிம் கலந்து கொண்டனர். இப் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மாஞ்சோலை 207யு சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த சமுர்த்தி கொடுபுப்பனவும் இன்று வழங்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று … Read more

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலை:தொடர்ந்தும் கண்காணிப்பு

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வகின்றது. உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு பல நாடுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. தற்போது உக்ரேனில் சுமார் 40 இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். அவர்கள் தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி அந்நாட்டில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரேனில் இலங்கைக்கான தூதரககம் ஒன்று … Read more

சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை

சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை ,தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஆதரவும் இன்றியமையாதது என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். சிலர் தமது குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வீதிகளில் யாசகம் பெறுவதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இதுபோன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக பொறுப்பானவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பான சட்ட … Read more

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் – பொலிஸ் குழுக்கள் விசாரணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவரின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் இன்று காலை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் … Read more

காவத்தமுனை வடிகான் புனரமைப்பு – தவிசாளர் ஏ.எம்.நௌபர் நேரில் விஜயம்

  கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காகித நகர் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதி வடிகான் அமைப்பு வேலைத்திட்ட பணிகள் மீண்டும் அரம்பிக்கப்பட்டுள்ளன.உலக வங்கியின் 4.17 மில்லியன் ரூபா கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள 176.7 மீட்டர் நீளமுடைய இவ்வடிகான் அமைப்பு வேலைத்திட்டமானது கேள்வி மனுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் இரு ஒப்பந்தக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

2022.02.11 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் 2022.02.11 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

உலகம் முழுவதும் கொரோனா: 41.20 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.20 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், இந்த வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது. இதற்கமைய, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 இலட்சத்து … Read more

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல…” ஜனாதிபதி தெரிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார். “ஜனாதிபதி மீது … Read more

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்… “சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள்…”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக … Read more