கொவிட் தொற்றுக்குள்ளான உயர் தர பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு
தற்போது நடைபெறும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேட அறிக்கை ஒன்றை பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான பரீட்சாத்திகள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ள வைத்தியசாலை மற்றும் இடை நிலை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும். இந்த மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். தொற்றுக்குள்ளான அனைத்து … Read more