ஜனாதிபதி தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செலவுத் தலைப்பு தொடர்பில் கலந்துரையாடல் 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அதன் ஒரு அங்கமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சுகளின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர்.நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன … Read more

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த நடவடிக்கை

தற்போது பயன்படுத்தப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதுள்ள அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை … Read more

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம்

  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார்.  அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.    ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2024. 12. 10  

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் இன்றுடன் நிறைவு 

2024 கல்விப்  பொதுத் தரா தரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு முடிவடையும். நிகழ்நிலை ஊடாக பரீட்சைக்கான விண்ணாப்பத்திற்காக கடந்த நவம்பர் 5ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகக்  குறிப்பிட்டார்.  

கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.  கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய,கல்வி,  உயர்கல்வி, தொழில் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் … Read more

இராணுவத் தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 9 டிசம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார். சுமூகமான சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கை இராணுவத்தின் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தும் பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினர். இரு தரப்பினரும் நிறுவனங்களுக்கு … Read more

யாழ் மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை

இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 2024.12.10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார்.  மேலும், இதுவரை பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுள்ளார். 

இலங்கையின் முன்னேற்றம், பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) அவர்கள் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்கத் தூதுக் குழுவினர் டிசம்பர் 06ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வல அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர். ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரமைப்பின் (USAID) ஆசியப் பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் (Anjali Kaur), அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களத்தின் ஆசியாவுக்கான துணை உதவிச் செயலாளர் ரெபேர்ட் … Read more

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்

2024 மக்கள் ஆணை என்பது மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 வழக்குகளையும், 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகளையும் வாபஸ் பெற்றதற்கான காரணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இலங்கையின் சட்டம் இது வரை சிலந்தி வலை போன்று செயற்பட்டதால் அதில் சிறிய விலங்குகள் சிக்கின. பெரிய விலங்குகள் தப்பிச் சென்றன. இலங்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் … Read more

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து, கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன என்று திருகோணமலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தெரு … Read more