அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் ஈ சொனெக், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருடன் அமெரிக்கத் தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ் மற்றும் அரசியல் அதிகாரி கெவின் பிரைஸ் ஆகியோரும் உடனிருந்தனர். வருகை தந்த அமெரிக்க தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்ற மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அவர்களுடன் பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்கள் தொடர்பான சுமுகமான கலந்துரையாடலில் … Read more

பொதுமக்கள் தினத்தில் ஓய்வு பெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர் குடும்பங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு அமைச்சு கவனம் 

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தின நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 17) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் … Read more

ரத்துகலை பழங்குடித் தலைவர் மற்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு இடையில் சந்திப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சகத்தில் கடந்த 16ஆம் திகதி ரத்துகலை பழங்குடித் தலைவர் அமைச்சர் சமந்த வித்யாரத்னவை சந்தித்தார். இதன்போது பிபிலை மற்றும் அம்பாறை பிரதேசங்களுக்கு இடையே அமைந்துள்ள ரத்துகலை பழங்குடி கிராமத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ரத்துகலை பழங்குடி தலைவர் அமைச்சரிடம் தெளிவு படுத்தினார். இதில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பதாக ரத்துகலை பழங்குடித் தலைவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ரத்துகலை … Read more

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவி  கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களுக்கு

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக கௌரவ கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று (18) சபையில் … Read more

விவசாயிகளுக்கான உர மானியம் நிச்சயம் வழங்கப்படும்

இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று (18) பாராளுமன்றத்தில் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். உர மானியம் தொடர்பாகக் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த போகத்தில் தீர்க்கப்படும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகளை அரசர்களாக்கும் யுகமொன்றை நிச்சயமாக … Read more

தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பதிரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2024 டிசம்பர் 11 அன்று கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

சுவிட்சர்லாந்தின் பிரதித் தூதுவர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு. ஒலிவியர் ப்ராஸ் அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார். முதலாம் படைத் தளபதியும் பதில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தூதுவரை மரியாதையுடன் வரவேற்றதுடன், சமூக உறவுகள் திட்டங்கள், இராணுவம் பாதுகாப்பு, மற்றும் பொது பணிகள் தொடர்பாக … Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கிழக்கு மாகாணக் கல்வித் துறையில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இராணுவம் CPSTL உடன் இணைந்து கெரவலப்பிட்டி எண்ணெய் சேமிப்பு முனையத்தில் தீயணைப்பு பயிற்சியை மேற்கொண்டது

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கெரவலப்பிட்டி பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இலங்கை இராணுவம் (SLA) மற்றும் இலங்கை பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் நிறுவனத்துடன் (CPSTL) இணைந்து தீயணைப்பு ஒத்திகை பயிற்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவசரகால சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்ககும் போது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவததை நோக்கமாகக் கொண்டு இப்பயிட்சி நடத்தப்பட்டதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனர்த்த முகாமைத்துவ நிலையம்- சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுக அதிகாரசபை, இலங்கை விமானப்படை, … Read more

முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு நாளை

ஊடக அமைச்சின் தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு 2024, நாளை (19) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. செயற்கை நுண்ணறிவு பற்றிய சொற்பொழிவு, இதழியலின் எதிர்காலப் போக்கில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் என்ன ? இலங்கை ஊடக கலாச்சாரத்தின் திசையில் அதன் சமகால போக்குகள் என்ன செய்கின்றன? என்பது  தொடர்பாக கல்வி ரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் கவனம் செலுத்தி, அறிஞர்கள் மற்றும் ஊடக … Read more