கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

55 வது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 25 ஆகஸ்ட் 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த … Read more

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் … Read more

வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது

இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர். கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை இணைப்பில் கடற்படையினர் குறித்த தீவு பகுதியில் நேற்று ( 2024 ஆகஸ்ட் 27) காலை மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது நீந்திக் கரைக்கு வந்த ஒருவரை அவதானித்தனர். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட … Read more

இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நரே சூரியன் உச்சம் கொடுக்கும்

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும், … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் சிறுபோக நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோக்கிராமிற்கு 105/- ரூபாய்களும், சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 115/- ரூபாய்களும், கீரி சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 130/- ரூபாய்களுமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தொடர்ந்து வரும் பெரும்போகச் செய்கையில் உயரிய நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் … Read more

2025 ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடசாலைப் பாடநூல்களை அச்சிடல்

குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடநூல்களை அச்சிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அச்சிடுவதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 246 பாடநூல் வகைகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமுறி … Read more

கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான சர்வதேச விலைமணு கோரலூடாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கடவுச் சீட்டுக்களை தயாரிப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பைக் கருத்தில் கொண்டு, இலத்திரனியல் … Read more

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்காக வாய்ப்பு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தைத் தாபிக்கும் போது, முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைப்புச் செய்யப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தமது சுயவிருப்பின் பேரில் ஓய்வூதியத்துடன் கூடிய அப்போதிருந்த வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்க்கப்படுவதற்கு பல சந்தர்ப்பங்களில் … Read more

உர மானியம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்படும்

எதிர்வரும் பெரும்போக நெல் விளைச்சலை அதிகரிக்கவும், நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் ஹெக்டேர் ஒன்றிற்கு வழங்கப்படும் உர மானியத்தை ரூ.25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் … Read more

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம்

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பிராந்தியத்தின் மத்தியநிலையமாக மையப்படுத்துவதற்கும், மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் தாங்குதிறனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம், பேண்தகு பொருளாதார விருத்தியை அடைவதற்கும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்பதற்காக முக்கிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவின் பயன்களை சமூகத்தில் நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற … Read more