உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபை, தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

2024.08.26 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களை கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலப்பகுதி 2024.08.26 முதல் 2024.09.13 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையவுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்தல்

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிளஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான ஈ.எல்.எஸ். கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

மூன்று சீன யுத்தக் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

மக்கள் சீன முன்னணிப் படையின் (Chinese People’s Liberation Army Navy) யுத்தக் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக் கப்பல்கள் மூன்று உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று (26) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்ததுடன், இலங்கை கடற்படையினால் அக்கப்பல் கடற்படையின் சம்பிரதாய வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து, Destroyer எனும் வகையைச் சேர்ந்த “HE FEI” யுத்தக் கப்பல், 144.50 மீற்றர் நீளமும் முழுமையாக 267மீற்றர் … Read more

4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி வெற்றி

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார். வளர்ந்து வரும் பெண் தடகள வீராங்கனையான அவர் தற்போது தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி கேடியூ 93 பீ இன் கீழ் தனது தனது மேலதிக இராணுவப் … Read more

ஐந்து வகைத் தேயிலை உரங்களின் விலை குறைப்பு….

அரச உரக் கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான தேயிலை உரங்களின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி அரச உரக் கம்பனி தற்போது தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வு 200, வு 750, ரு 709, ரு 834, வு 65 ஆகிய ஐந்து வகை உரங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்திலிருந்து இந்த வகை 50 கிலோகிராம் உரத்தின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் … Read more

40 வருடங்களாக சீகிரியா மக்களை பாதித்த வனவிலங்குக் காணிப்பிரச்சினைகுத் தீர்வு ….

தம்புள்ளை, சீகிரியா அரை நகர்ப்புற 12 கிராம சேவகர் பிரிவுகள், வனவிலங்கு வலயங்களாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமையினால் 40 வருடங்களாக தீர்க்கப்படாது காணப்பட்ட சமூக பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட்டு மக்களுக்கு சுதந்திரமாக காணிகளை அனுபவிக்கும் உரிமையை வழங்க முடிந்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பொறியியலாளர் நாலக பண்டார கோட்டேகொட வின் தலையீட்டினால் இலங்கைப் பாராளுமன்ற சுற்றாடல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான செயற்குழு கடந்த வாரத்தில் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது. அதன்படி அங்குள்ள … Read more

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பொதிகளை இன்று (26) முதல் தபால் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதி தபால் மா அதிபர்கள், பிரதம கணக்காளர்கள், பிராந்திய தபால் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தபால் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினொரு (11) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2024 ஆகஸ்ட் … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 776 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தாறு (776) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர் தீவு முழுவதும் கரையோரங்கள் மற்றும் கரையோரங்களை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, … Read more

அதிகளவில் வரி நிலுவை உள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை!

• உள்நாட்டு இறைவரி, சுங்கம், மதுவரி ஆகிய மூன்று திணைக்களங்களிலும் 90 பில்லியன் ரூபாய்க்கும் குறைவாகவே வரி நிலுவை உள்ளது. • 2023 இல் 3 டிரில்லியன் ரூபாய் சாதனைமிகு வருமானம்- மதுவரி ஆணையாளர் நாயகம். • நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் வரி வருமானம் சேகரிக்கும் இலக்குகளை மிஞ்சி செல்ல முடிந்தது- உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (வரிக் கொள்கை, சர்வதேச விவகாரங்கள் மற்றும் சட்டங்கள்). • ஊழியர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் வரி … Read more