தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்.

  2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.26 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 127 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.26 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1052 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபை வைப்புப் பணம் கையேற்றல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபையி வைப்புப் பணம் கைறே;றல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு.

ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துடன் தற்போதைய நீர்க் கட்டணச் சூத்திரத்தின் பிரகாரம் இரசாயண திரவங்கள் உட்பட ஏனைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் … Read more

2024 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் – எல்பிட்டிய பிரதேச சபையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல்

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2024க்கான தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி இன்று (26) வெளியிட்டுள்ளார்.

கடற்படையினரின் பங்களிப்புடன் மஹமோதர மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று (2024 ஆகஸ்ட் 24) காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லையுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின மற்றும் காவந்திஸ்ஸ நிறுவனங்களின் கடற்டையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் மூலம், காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை … Read more

இலங்கையில் சூரிய சக்தி மற்றும் விவசாயத் திட்டங்களில் கொரிய முதலீடுகள்….

தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில்முயற்சியாளர்களில் ஒருவரான யோங்-ஜோ மூன் அவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதில் விருப்பம் தெரிவித்த திரு. யோங்-ஜோ முன், அவர் தலைமை வகிக்கும் சர்வதேச பரிவர்த்தனை அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்த தொழில்முயற்சியாளர்கள், இலங்கையில் பல சூரிய சக்தி திட்டங்களிலும், பழச் செய்கைகளிலும் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.. இலங்கையில் பழச் செய்கையில் … Read more

நாட்டின் சில பிரதேசங்களுக்கு பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, … Read more

இந்த வருடத்தில் வருமான வரியில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது 

எவ்விதத்திலும் இந்த வருடத்தில் வருமான வரியின் அளவை குறைக்க அல்லது மாற்ற முடியாது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்று போது இவ்வாறு குறிப்பிட்டார். தனிநபர் வருமான வரி விரைவில் குறைக்கப்பட உள்ளதாக கடந்த நாட்களில் எமக்கு அறிய முடிந்தது. குறிப்பிட்ட ஒரு தொகையில் இந்த வரி குறைக்க … Read more

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள்

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால்  இன்று (24) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

3 வது சதத்தை பெற்ற கமிந்து மெண்டிஸ்!

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் இன்றாகும். மென்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் கமிந்து மெண்டிஸ் தனது 3 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றார். மேலும் இப்போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி சற்று முன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் … Read more