இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் புதிய சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்

இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon Lee) அவர்கள் அண்மையில் (04) சபாநாயகர் கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அவர்களும் கலந்துகொண்டார். இச்சந்திப்பில் புதிய சபாநாயருக்கு தென்கொரியத் தூதுவர் தனது பாராட்டைத்தெரிவித்துக்கொண்டார். தென்கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை நினைவுகூர்ந்த தூதுவர், இந்த உறவை மேலும் வலுப்படுத்தி இலங்கையின்அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை தென்கொரியா வழங்கும் என்றும் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள … Read more

ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செலவுத் தலைப்பு கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பின் கீழ் வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி … Read more

யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி 

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுத்து யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற வனவிலங்குகளால் மக்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு அறிவியல் முறையில் தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் வனவிலங்கு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடி அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக நேற்று (10) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் … Read more

பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல் நிகழ்வு

“ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களுக்காக பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பொதி செய்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல்” நிகழ்வு அண்மையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் இடம்பெற்றது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) யின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய பொதியிடல் மத்திய நிலையம் (NPC) ஆகியவற்றின் ஊடாக இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. நவீன பொதியிடல் தீர்வானது பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைப்பதன் ஊடாக பொருளாதாரத்திற்கு அவசியமான பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் ஏற்றுமதி உற்பத்திகளின் … Read more

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார். கடந்த 09ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அவர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசின் வலுசக்தி அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் இரு நாடுகளுக்கு இடையிலான வலுசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி … Read more

கம்பஹா மாவட்ட செயலகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நிகழ்ச்சி

கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தலைமையில் சமீபத்தில் மாவட்ட செயலகத்தில் ஏற்றுமதி நோக்கில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கம்பஹா மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய பொருளாதாரத்திற்கு உற்பத்தித் திறன் மிக்க தொழில் முனைவோரை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏற்றுமதி சந்தைக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் மீன் வளர்ப்பிற்கு … Read more

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை

இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன்; தலைமையில் நேற்றைய தினம் காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 03.00 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையினை அரசாங்க அதிபர் அவர்களுடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. நில்மினி ஹேரத் அவர்களும், பணிப்பாளர் திருமதி இரேஷ தர்மசேனா அவர்களும் மற்றும் ருNகுPயு … Read more

மஹாவிளச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான பொருட்கள் விநியோகம் அண்மையில் (06) மகாவிளச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இலக்கம் 367 தெமடமல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எஸ். திருமதி சுமங்கலா என்பவர் தெரிவு செய்யப்பட்டு அவரது சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சில உபகரணங்கள் வழங்கப்பட்டதாக பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்வில், மகாவிளச்சி பிரதேச செயலாளர் மஞ்சரி … Read more

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது! – அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன வகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது யுத்த காலப் … Read more

சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் – அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டின் தற்போதைய … Read more