மிகை வரி சட்ட மூலத்தில் ETF, EPF நீக்கப்படும்

மிகை வரி சட்ட மூலத்தில் ,ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான திருத்தம் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரினால் சமர்பிக்கப்படும் என்றும் … Read more

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள்

அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகாரம், … Read more

விசேட சலுகை விலையில் லங்கா சதொச தண்ணீர் போத்தல்கள்

அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு லங்கா சதொச தண்ணீர் போத்தல்களை விசேட சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் ஒன்றை மீள ஒப்படைக்கும் போது ஏற்கனவே அறவிடப்பட்ட 10 ரூபா மீள செலுத்தப்படும். இதற்கமைவாக 19 ரூபாவுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை லங்கா … Read more

50 மில்லியன் ரூபா செலவில் பத்தரைக்கட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நேற்று (14)  திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார். அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 150 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக சுமார் 50 மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக … Read more

Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector”

Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector” The Centre for Banking Studies (CBS) of the Central Bank of Sri Lanka (CBSL) has made arrangements to conduct above captioned webinar on 17th February 2022. Considering the prevailing situation in the country, the CBS has arranged this forum as a web-based forum on Thursday, 17th February … Read more

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை வழங்கத் தயார் – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறும். அப்போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், இந்த அறிக்கை மார்ச் மாதம் 3ம் திகதி கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு … Read more

கொட்டகலையில் போதை வில்லைகள் விற்பனை: போலி வைத்தியர் கைது

தாம் வைத்தியர் என்று கூறிக்கொண்டு போதை வில்லைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியராகத் தோன்றி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் போதை வில்லைகளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து 338 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வில்லைகளை வாங்குவதற்காக வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் திம்புல-பத்தன பொலிசார் மேலதிக விசாரணைகளை … Read more

இலங்கை அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் இரு அணிகளும் தலா 164 ஓட்டங்கள்  பெற்றதனால் போட்டி சமநிலையில் இருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது பந்திலேயே வெற்றி பெற்றது. இப்போட்டியில் … Read more

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று (14) ஆரம்பமானது. இந்த கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 3,500 ரூபா சமுர்த்தி கொடுப்பனவை பெற்றவர்கள் இன்று முதல் 4,500 ரூபாவை பெறத் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்றவர்கள் 3,200 ரூபாவையும், 1,500 ரூபாவை பெற்றவர்கள் 1,900 ரூபாவையும் பெறவுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி வங்கிகள் ஊடாக இந்தக் கொடுப்பனவை … Read more