காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணி சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து (Video)

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023)  கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார். மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட … Read more

ஒரே வாரத்தில் என்னால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்! மேர்வின் சில்வா

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு திட்டம் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சர் தமது நல்ல நண்பர் எனவும், … Read more

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்தமயமாக்கலும்

Courtesy: கூர்மை உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன. ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள். கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் … Read more

வங்கக்கடலில் தீவிரமடையும் மோக்கா புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடல் அருகே உருவாகி வரும் மோக்கா புயல் வெள்ளிக்கிழமை (12 ஆம் திகதி) தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்கனவே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளுக்கு எச்சரிக்கை இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, மோக்கா புயல் … Read more

யாழ். யுவதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிங்கள யுவதி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பலராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தியகமவில் நடைபெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி 2 பதக்கங்களை வென்றுள்ளார். வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை வெற்றிகொண்டார். பரிதிவட்டம் எறிதல்  18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கமும் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார். மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட யாழ். மாணவி பயன்படுத்தும் தரமற்ற நிலையில் இருந்த … Read more

வடக்கும் கிழக்கும் ஒன்றே! சாணக்கியன் சபையில் ஆவேசம் (Video)

‘‘ஜனாதிபதியுடன் நாளை மறுதினம் (12.05.2023) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வர வேண்டும்‘‘என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்று  (09.05.2023) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘‘தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு மக்கள் தந்த பொறுப்பு, மக்கள் தந்த ஆணை எங்களுடடைய மக்களுக்கான நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை பெறுவதாகும்‘‘ என இன்றைய அமர்வில் தெரிவித்துள்ளார்.  அதிகாரப் பகிர்வு தொடர்பில் … Read more

மதம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு இதுவே! தையிட்டியில் நடப்பது என்ன..Video)

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறானதொரு பௌத்த மயமாக்கல் தொடர்பில் சிந்தித்ததும் கிடையாது, செயற்பட்டதும் கிடையாது. அவர்கள் ஒரு மத சார்பற்ற கோட்பாட்டில் தான் இருந்தார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மூத்த துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  சிங்கள தேசத்தினுடைய நீண்ட கால நிகழ்ச்சி நிரலே தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.  தற்போது தீவிரமாக,  வெளிப்படையாக … Read more

ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை இந்திய தூதுவரிடம் எடுத்துரைத்த சம்பந்தன்

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்றைய தினம் (10.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நேற்றைய தினம் (09.05.2023) மாலை ஜனாதிபதியுடன் முதலில் சந்திப்பு நடந்தது. வடக்கு … Read more

மகிந்தவுக்கு மரண போஸ்டர் அடித்த நபர்! களுத்துறை மாணவியின் மரணத்துடன் தொடர்புடையவரும் சிக்கலில் – வெளியான தகவல்

மகிந்த ராஜபக்‌சவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.  காலி முகத்திடல் போராட்டக்களத்தில்  முன்னணியில் இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக் கொண்டிருக்கின்றது எனவும், மக்களை தவறாக வழிநடத்திய போராட்டக்காரர்கள் பலர் இறந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.  நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.05.2023) இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  மகிந்தவுக்கு மரண போஸ்டர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காலி முகத்திடல் போராட்ட களத்தில் பல்வேறுபட்ட … Read more

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். நாளை (11.05.2023) முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  முன்னோடி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 300 பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  Source link