இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி

2024 மற்றும் 2034க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருத்தப்பட்ட அளவுகோலின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான ஜீ.எஸ்.பி. (GSP) வர்த்தக வசதிக்காக, இலங்கை மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கவேண்டும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஆணையம், 2021ஆம் ஆண்டில், அடுத்த பத்து ஆண்டுக் காலத்திற்கு ஒரு சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது.  எனினும் தற்போதைய ஜிஎஸ்பி விதிமுறை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாக உள்ளது. இந்தநிலையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான ஒப்புதல் கோரி ஒரு கூட்டு … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு: சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையின் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்றைய தினம் (09.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு இந்த வழக்கில் சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்ட நிறுவனம் இலங்கையின் சார்பில் முன்னிலையாகியுள்ளது. சேதத்துக்காகக் கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரியே சிங்கப்பூர் நீதிமன்றில் … Read more

ஹிருணிகா மீது வழக்கு விசாரணை

இளைஞர் ஒருவரை கடத்தியதாக கூறப்பட்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று(09.05.2023) கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன. அமில பிரியங்க அமரசிங்க என்ற இளைஞர், 2015 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் பின்னர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் மறுப்பு 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ஆடையகம் … Read more

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைக்காலம் நீடிப்பு

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான சலுகைக்காலத்தினை இந்தியா ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இந்த 1 பில்லியன் கடன் சலுகைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருந்த நிலையில்,  பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2024 மார்ச் வரை சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கையின் பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க இன்று(09.05.2023) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பெற்றுக்கொண்ட கடன் வசதியின் அடிப்படையில் 350 மில்லியன் டொலர் மீதம் … Read more

’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ்

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குழந்தை பருவத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் செயல்கள் இருக்கும். கவலைப்படாமலும், ஜாலியாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் காலங்களை தற்போது நினைத்தாலும் மறக்கமுடியாது. பசுமை மாறாத அந்த நினைவுகளை தற்போதும் நினைத்துப் பார்த்தாலும் தற்போதுள்ள கவலையினை மறக்க செய்யும். இங்கு சிறுவன் ஒருவன் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கின்றார். குறித்த மாணவர் நன்றாக சத்தமிட்டும் … Read more

தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் (SLRSMU) மத்திய குழு இன்று (09.05.2023) இரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொழிற்சங்க மத்தியக் குழு அவசரக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசித்து, இந்த நியமனத்துக்கு … Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஜனாதிபதி சந்திப்பு! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை  நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் இன்று (09.05.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டது. எட்டப்பட்ட தீர்மானம்  கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் இன்றைய … Read more

மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்

கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார். அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க … Read more

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரத்தினக் கொத்து என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு … Read more

இரண்டு தனியார் வங்கி கணக்குகளுக்கு வந்த கோடிக்கணக்கான பணத்தால் சர்ச்சை

இலங்கையில் இரண்டு தனியார் வங்கி கணக்குகளில் 5 கோடி ரூபாய் பணம் வைப்பிடப்பட்டதனையடுத்து அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான இரண்டு தனியார் வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தடை விதித்துள்ளது. “ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி” என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் … Read more