மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக்களைக் கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமுகமாகக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.  கல்வி மறுசீரமைப்பு இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குப் பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் … Read more

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) மேலும் பத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை    2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை … Read more

தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகும் மஹல ஜயவர்தன!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டுச் சபை உருவாக்கப்பட்டது.    விபரங்கள் வெளியிடப்படவில்லை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹல விளையாட்டுச் சபையின் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். என்ன காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் … Read more

கடத்தப்பட்ட இலங்கை திரைப்பட இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை

இலங்கை தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ஒருவரைக் கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேரை பதுளை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (05.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 51 வயதுடைய இந்த திரைப்பட இயக்குநர் காமினி பிரியந்த, வெலிமடையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேன் வாகனம் ஒன்றில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்றுள்ளனர். தனிப்பட்ட முறுகல் இதன் பின்னர் கொடூரமான முறையில் … Read more

மாறாத பெண் மனித வதைகள்: விடியலை நோக்கி ஒரு சமூகத்தின் பயணம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 200 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையிலும் கூட, இலங்கையின் மலையகம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் பாரிய அளவில் பாதிக்கப்படுபவர்களாக மலையகப் பெண்கள் காணப்படுகின்றனர். “ஒரு பெண்ணின் வலிமை அவளது தசைகளில் இல்லை…. அவளுடைய மனதிலும் உள்ளத்திலும் உள்ளது” என்று கூறுவார்கள். அதுபோன்று எமது மலையக பெண்கள் வலிமையுள்ளவர்கள். ஆனால் களங்கள் அமையவில்லை. சாதிக்கக் கூடியவர்கள் ஆனால் வழிகாட்டப்படவில்லை… … Read more

ரணில் – ருவண்டா ஜனாதிபதி சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

 மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் பிரித்தானியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு பல முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார். அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) ருவண்டா ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பு குறித்தும் ஆராய்ந்துள்ளனர். இலங்கை பாதுகாப்பு படைகள் மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது … Read more

கொழும்பில் வேலை செய்யும் பெற்றோர்: 13வயது சிறுமியின் விபரீத முடிவு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமியொருவரே இவ்வாறு நேற்று (5.05.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்வதாகவும்,  தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Source link

இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை

இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஆகிய மூன்று அவசர வேலைத்திட்டங்களாகும். ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற … Read more

அலங்கார பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம் அதனால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (05.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 90 கோடி ரூபாய் “அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம். அலங்காரம் என்னும் விடயதானத்திற்குள் தான் வெசாக் அலங்காரங்களும் உள்ளடங்கியுள்ளன. இதனால் அலங்காரங்கள் குறைந்து விட்டதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது. இதற்கு … Read more

அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்படவுள்ள விசேட சுற்றறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார். விசேட சுற்றறிக்கை இது தொடர்பில் மேலும் கூறுகையில்,எதிர்வரும் திங்கட்கிழமை (08.05.2023) தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் அமைச்சு சுற்றறிக்கை வெளியிடும். அதன்படி இந்த வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு வெளியே அருகிலுள்ள தேவையின் அடிப்படையில் சேவையில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் … Read more