பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் லண்டன்! பாதுகாப்பு தீவிரம் : தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்

பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழா நாளைய தினம்(06.05.2023) மிக பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.   இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண்மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் இந்த பிரம்மாண்ட விழாவை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும்  தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன்,  இந்த விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சுவை நாட்டிற்கு அனுப்புவது கடினம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அரசியல் அகதிகளுக்கான ஓப்ரா என்ற அமைப்பில் அவர் பதிவு செய்யப்பட்டுள்ளமையே அதற்கு காரணமாகும். அஞ்சு ஒரு பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பாரிஸில் உள்ள இன்டர்போல் பொலிஸார் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சுவின் சார்பில் உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையாகி வருவதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை இலங்கைக்கு அனுப்பினால் … Read more

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள் – பெருந்தொகை தங்கம் மீட்பு

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் … Read more

மக்களுக்கு உணவு கொடுக்க வீதியில் இறங்கிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது. Source link

இலங்கையை மீண்டும் மிரட்டும் கோவிட்! அதிகரிக்கும் தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி அதிகரிப்பு இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்று உறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  Source link

விரைவில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகள்! அதிஷ்டத்தில் திளைக்க உள்ள இரு ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இன்றைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் … Read more

காதலனால் காதலிக்கு ஏற்பட்ட கொடூரம்: கண்டியில் சோகம்

தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04.05.2023) கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணை இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டையே உலுக்கிய சம்பவம் … Read more

தாமரை கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்

கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தை இரண்டு நாட்களுக்கு நள்ளிரவு வரை திறந்திருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜப்பானுடனான உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் அணி ஒன்றை, இலங்கை, ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் வளர்ந்து வரும் அணி ஒன்று, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் என்று சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜப்பான் தேசிய … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 … Read more