சிறை கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05.2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி  இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (5.05.2023) மற்றும் நாளை … Read more

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேற்படி வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பு குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட நீதிப்பேராணை மனு நேற்று … Read more

முல்லைத்தீவு கடற்படை புலனாய்வாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை (Photos)

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21க்கு தவணையிடப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் … Read more

இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்! பின்னணியில் மறைந்துள்ள மாபியாக்கள்

இலங்கையில் தற்போது அதிகளவு பேசுப்பொருளாகியுள்ள ஒரு விடயம் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச் சம்பவங்கள். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனின் ஆங்காங்கே அரங்கேறும் இந்த கொலைச் சம்பவங்கள் அவ்வப்போது மட்டும் ஊடகங்களால் பெரிதும் பேசப்படுவதும், மக்கள் பதற்றமடைவதும் அதற்கு உடனடியாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதும், பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுப்பதும் ஆகும். பொதுவான கருத்தொன்று எம்மத்தியில் உள்ளது. அதுதான் ‘‘இதுவும் கடந்து போகும்‘‘ என்பது போல … Read more

கொழும்பில் Beauty Salon செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆபத்தான பெண் கண்டுபிடிப்பு

கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர். அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் … Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மனநிலை தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய போக்குவரத்து … Read more

மற்றொரு விமான நிலையம் அமைக்க தயாராகும் அரசாங்கம்

விமானப்படையால் நடத்தப்படும் ஹிகுரக்கொடட விமான ஓடுதளத்தை மேம்படுத்தி மற்றுமொரு சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (03.05.2023) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள ஓடுபாதையின் நீளம் 2287 மீட்டர். இதனை 2800 மீட்டராக நீட்டித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டுமானம் விமான தளம் … Read more

போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி : ஊடகங்களின் வகிபாகம் தொடர்பில் அமைச்சர் பகிரங்க கேள்வி

கடந்த ஆண்டு அரகலய போராட்டத்தின் போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு குறித்து அரசாங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்ட போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு தொடர்பில் தனக்கு கேள்விகள் இருப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (03.05.2023)  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் ஊடக சுதந்திரம் இலங்கையில் ஊடக … Read more

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்! ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(வயது 69) சென்னையில் இன்று (03.05.2023) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இயக்குனர் மற்றும் நடிகர் இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். இதேவேளை … Read more