அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் இலங்கை

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். மிக நீண்ட கால இலங்கையின் நட்பு நாடான அமெரிக்கா தன்னிச்சையாகவும், உரிய நடைமுறைகளை … Read more

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும்  ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கோவிட் நோய் தொற்று இதன் காரணமாக சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார … Read more

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

 மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர். சமூக விழுமிய செயற்பாடு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரியின் சமூக விழுமிய செயற்பாடொன்றாக குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more

வீட்டுக்குள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்

மாத்தறையில் வீடொன்றிற்குள் புகுந்த குழுவொன்று 13 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட நால்வரை கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஊர்பொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு இரவு 9.00 மணியளவில் வந்த குழுவொன்று தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரையும் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டிகளில் வந்த கும்பல் … Read more

சயனைட் மூலம் 9 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

9 பேரை, சயனைட் கொடுத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகி்ன்றது.  குறித்த பெண் பாங்காக்கில் வைத்து நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (26) தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நடந்த கொலைகள் பல ஆண்டுகளாக நடந்த இந்த கொலைகள் தொடர்பாக 30 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  பணமே இக்கொலைகளுக்கான காரணமாக இருக்கலாம் என தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் அர்சயொன் க்ரெய்தோங் … Read more

விமலின் புத்தகத்திற்கு அமெரிக்க தூதுவர் கடும் எதிர்ப்பு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச அண்மையில் அமெரிக்காவிற்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தமது டுவிட்டர் பதிவில் குற்றச்சாட்டுகளை ‘அடிப்படையற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். I am disappointed that an MP has made baseless allegations and spread outright lies in a book that should be labeled “fiction.” For 75 years, the US & SL … Read more

அம்பாறை ரஜகல தொல்பொருள் தளத்தின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்: தொல்பொருள் திணைக்களம்

அம்பாறையில் அமைந்துள்ள  ரஜகல தொல்பொருள் தளத்தின் பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்கள ஊடகப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.  பராமரிப்புப் பணிகள் பராமரிப்புப் பணிகள் எம். குபேரன் மாயா (பராமரிப்பு உத்தியோகத்தர்) இரேஷா ஜீவந்தி (பராமரிப்பு பிரிவுத் தலைவர் ) எம்.பி. அலஹகோன் மாயா (பிராந்திய அதிகாரி), பி. ராசு மாயா (பிராந்திய அதிகாரி), ஹிமாலி துனுசிங்க, எஸ். ஏ. பிரசன்னா மாயா, உபுல் பண்டார ஆகியோரின் பங்களிப்புடன்  இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. … Read more

இலங்கையில் முதன்முறையாக உருவாகும் தொழிற்சாலை

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. உலகளவில் உருளை சிப்ஸின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. குறித்த ஏற்றுமதி நிறுவனத்தின் வெற்றியானது மேலதிக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதுடன் … Read more

இலங்கையில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து

இலங்கைக்கு அண்மித்த பகுதியில் 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையிலான புதிய நில எல்லை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார். இந்த அபாயம் காரணமாக இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 09 நிலநடுக்கங்கள் … Read more

8 ஆயிரம் இலங்கையர்களுக்கு கொரியா வழங்கும் வாய்ப்பு

இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை 8,000 ஆக கொரியா அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்றையதினம்(26.04.2023) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, அந்த திணைக்களத்தின் பிரதானி, இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். டிசம்பருடன் காலாவதி கொரிய மொழி ஆற்றலுடன் தயாரிப்பு பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத்துறையில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது … Read more