அரசாங்கத்துடன் இணையவுள்ள சஜித் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்! பகிரங்கமாக அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அரசாங்கத்துடன் இணையப்போவதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்லவிடம் சவால் ஒன்றையும் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்தால், லச்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும் அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். போலி செய்தி ஐக்கிய மக்கள் சக்தியில் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பார்கள், … Read more

விரைவில் நிகழவுள்ள 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள்!அதிஷ்டத்தில் திளைக்கவுள்ள இரு ராசிக்கார்கள்- நாளைய ராசிபலன்

ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி மற்றும் புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. ஏப்ரல் 6 – சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளது. ஏப்ரல் 14 – சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடையவுள்ளது. ஏப்ரல் 21 – புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 22 – குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ … Read more

எதிர்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களில் கொழும்பு அரசியலின் பேசுப்பொருளாக அரசியல்வாதிகளின் கட்சி தாவல் செயற்பாடு காணப்பட்டது. அரசாங்கத்துடன் இணையவுள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகிய போதும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ அதனை மறுத்துவிட்டார். இந்நிலையில் அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம் ஹர்ஷ டி சில்வா, ​ஏரான் … Read more

போர்க்குற்றத்தை கையிலெடுக்கும் அமெரிக்கா! ரணில் தொடர்பில் இலங்கைக்குள் இரகசிய நகர்வு(Video)

அமெரிக்கா, இலங்கையை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    இங்கிருக்கும் அமெரிக்கத் தூதுவர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா இலங்கைக்குள் மிகவும் இரகசியமான முறையில் சேகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும், ரணில் தொடர்பில் … Read more

<span class="follow-up">NEW</span> லிட்ரோவை தொடர்ந்து லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது! வெளியான விபரம் (Video)

12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.3,990 ஆகும என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  முதலாம் இணைப்பு … Read more

அரச ஊழியர்கள் குறித்து இன்று நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று (03.04.2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார். நாடாளுமன்ற … Read more

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் சற்றுமுன்னர் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.  இதேவேளை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என … Read more

யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் (Photos)

யாழ்.பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவருக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணாகவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான விளக்கக் கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய … Read more

விரைவில் நிகழவுள்ள 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள்! ஐந்து ராசியினருக்கு குபேர ராஜயோகம் – நாளைய ராசிபலன்

ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டும், தொடர்ந்து குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளது.  ஏப்ரல் 6 – சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளது,  ஏப்ரல் 14 – சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடையவுள்ளது, ஏப்ரல் 21 – புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளது, ஏப்ரல் 22 – குரு பகவான் … Read more

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு! விசாரணைகளில் வெளிவந்த உண்மை

மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் காணாமல்போய் விட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதியன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்ததாக தகவகள் வெளியாகியுள்ளது. போலித் தகவல்கள் இந்த அழைப்பை ஏற்படுத்தி போலி தகவல் வழங்கியது, சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்கு நெருக்கமானவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவசர பொலிஸ் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலித் தகவல்களை … Read more