புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க தீர்வை சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வரும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அடிப்படையில் சுங்க தீர்வை சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகையை பல்வேறு வடிவங்களில் பெற்றுக்கொள்ள முடியும். 2400 முதல் 4799 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 600 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும் … Read more

14 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை (video)

14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்பு காவலில் இருந்த யாழ். வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், குறித்த மூவரையும் அனைத்து … Read more

லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல்  ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் வரலாற்றில் இவ்வளவு பாரிய தொகையில் விலை குறைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.  இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயுவின் … Read more

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்காக நோயாளிகளிடம் இருந்து மேலதிகமாக 1,350 ரூபா பணம் வசூலித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய அபராதம் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தனியார் வைத்தியசாலை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு … Read more

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? அவரே வெளியிட்ட அசத்தலான பதிவு

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா எனக்கேட்ட கேள்விக்கு அவரே ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறார். மணிமேகலை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி … Read more

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வூதியமும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அன்றைய திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். உரிய காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தத் தகவலை வெளியிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இவ்வருட இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதற்கமைய அரச … Read more

திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்ட ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி கொக்கல மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்காமல் நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி திடீரென ஹோட்டல்களுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டது. இங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார். இதன் போது ஐக்கிய தேசியக் … Read more

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது

யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விபரம் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது … Read more

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சிகள் ஆரம்பம்

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10 ஆவது பதிப்பு ஏப்ரல் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இந்திய கடற்படையை ஐ.என்.எஸ் கில்தான் மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி என்பன பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  இதேவேளை இலங்கை கடற்படையை விஜயபாகு மற்றும் சமுத்ரா ஆகிய கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்துடன் இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர், டோர்னியர் கடல் ரோந்து விமானம், இலங்கை விமானப்படையின் டோர்னியர் … Read more