மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தார். கொண்டாட்ட நிகழ்வின் போது பிரபல அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதை மகிந்த புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கலந்து கொள்ளாமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. Source link

நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாடு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் உருவாக்கப்படுவதை தடுக்க நீதி சேவைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை நீதி சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் தேவையற்ற மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட … Read more

எனக்கு பதவி வேண்டாம் – தேவையெனில் ரணில் தருவார் – மஹிந்த பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது. எனினும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  தனக்கு ஒரு தேவை என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராக இருக்கும் நிலையில் பதவி ஏற்கும் தயார் நிலையில் அவர் இல்லை என தெரியவந்துள்ளது. அத்துடன் அரசாங்கத்திற்கு அவசியமான நேரத்தில் ஆலோசனை வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே உள்ளார் … Read more

சுதந்திர வர்த்தக ஒப்பந்த விவகாரம்! இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா

கடன் மறுசீரமைப்பு மூலம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபடுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கையை கட்டாயப்படுத்துவதற்கு, சீனா அதன் நிதி செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இலங்கையின் நிலைமையானது வெளிநாட்டுக் கடன்களை அதிகமாக நம்பியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மூலோபாய நலன்களுடன் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. சீனாவின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள்  இறுதியில் … Read more

வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைப்பு! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து தெரிவிக்கையில் இவ்வாறான பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன எனினும், இன்னும் அந்த பிரச்சினைகள் இலங்கையில் தொடர்வது மட்டுமல்லாமல் வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக … Read more

இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு

‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு செயற்படுவதற்கு அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு விரும்பவில்லையென தெரிகிறது. எனவே இலங்கை இராணுவம் பலவீனமான நிலையை அடைந்துள்ளது அல்லது இருப்பிரிவாக பிரியக்கூடிய ஒரு சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக‘‘ இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ‘‘இலங்கை இராணுவத்தை பலமாக வைத்திருந்தால், … Read more

வெளிநாட்டில் வேலைக்காகப் பயணம் செய்யும் இலங்கைப் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். வேலைவாய்ப்பில் பல்வேறு … Read more

இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இதுவே தீர்வு: ரணில் பகிரங்கம்

“இனப்பிரச்சினைதான் நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது. எனவே, இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் நடத்தப்பட்ட ‘சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பசுமைப் பொருளாதாரத்துக்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருக்கின்றன. இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை … Read more

தென்னிலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தென்னிலங்கையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றைய நபர் படுகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 48 வயதுடைய குடும்பஸ்தரும் உயிரிழப்பு கோர விபத்தில் கார் சாரதியான 55 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் இருந்து பயணித்த அவரது 27 … Read more

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பேருவளை கரையோர பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் சிறிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுனாமி அச்சுறுத்தல் பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்கல் ஒரு மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் … Read more