சமகால உலக சந்தை தொடர்பில் ரணிலின் ஆரூடம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கணித்துள்ளார். எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்ட்களால் அதிகரிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் என கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசாங்கத்தின் … Read more

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் போர் – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நேரடி பாதிப்புகள்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்களின் தங்கள் சுற்றுலா காலத்தை நிறைவு செய்து நாடு திரும்ப முடியாத நிலையில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டல்களில் தங்கியுள்ள அவர்கள், தமது அறைகளை விட்டு வெளியேறுவதாக, உனவட்டுன சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்தின் தலைவர் ரூபசேன கொஸ்வத்த தெரிவித்துள்ளார். நெருக்கடியான … Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட வழிகாட்டல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதேவேளை கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறுகையில், பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.  அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

அரச பாதுகாப்பில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர்! வெளியாகியுள்ள தகவல் (Video)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் இன்றும் உயிருடன் உள்ளதாகவும், அவர்கள் அரசாங்க பதவிகளில் அரச பாதுகாப்பில் இருப்பதாகவும் இலங்கையின் சிவில் செயற்பாட்டாளரும் அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்தேச அமைப்பின் இலங்கைக்கான தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்று உயிருடன் இருக்கும் … Read more

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு! மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான … Read more

ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

 பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது. இந்த ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், பதவிக் காலத்தை ஜனாதிபதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைனில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்ததை அடுத்து உக்ரைனில் உள்ள இரண்டு மாணவர்கள் உட்பட சுமார் 40 இலங்கை பிரஜைகளை உக்ரைன்-போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வெளியேற்றும் செயல்முறையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக வார்சாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்குவதை அமைச்சகம் பலப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. “அங்காரா மற்றும் வார்சாவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் உக்ரைனை விட்டு … Read more

பணம் அனுப்புவதை குறைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்! – 13 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணம் அனுப்பும் மதிப்பு 2022ம் ஆண்டு ஜனவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜனவரி 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் பெறப்பட்ட 645.3 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 61.6 வீதம் குறைவாகும். 2021 டிசம்பரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2020 … Read more

ஐநா மனித உரிமைகள் கூட்டம் ஆரம்பமானது! – 26 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்க திட்டம்

இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய … Read more

தீவிரமடையும் போர் களம்! ரஷ்யா எடுக்கவுள்ள விஸ்வரூபம் – பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்பு (Photos)

ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான பாபா வங்கா ரஷ்யா தொடர்பிலும் கணித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி “ரஷ்யாவை தடுக்க முடியாது. அதாவது ரஷ்யா இந்த உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும். ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா ஒன்றுமே இல்லாத மோசமான வெற்று நிலப்பரப்பாக மாறும். உலகில் எல்லா … Read more