உக்ரேனிய பிரஜைகளை நெகிழ வைத்த இலங்கை மக்கள்

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய பிரஜைகள் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்களின் திட்டமிட்ட கால எல்லையை நிறைவு செய்துள்ள போதிலும், அங்கு நடக்கும் யுத்தம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் பணம் … Read more

பிரதமரின் அலுவலகம் திறக்கப்படுவதை நிறுத்திய அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது. குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், அலுவலகம் திறக்கப்படுவதை தாமதிக்குமாறு விடுத்த கோரிக்கையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. குருணாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன் பிரதமரின் சகல ஒருங்கிணைப்பு பணிகளும் அவரது தனிப்பட்ட செயலாளரான இளைய புதல்வர் ரோஹித்த … Read more

"ஞாயிற்றுக்கிழமை கடினமான நாள்’’ உக்ரைன் இராணுவம் அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நாளில் போர் களத்தை மேலும் சூடுபிடிக்க வைக்கும் வகையில் பதிவான சம்பவங்கள் தொடர்பான தொகுப்பினை இங்கே பார்க்கலாம், உக்ரைனியர்களுக்கு நேற்று “கடினமான நாள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் எல்லா திசைகளிலும் எறிகணை  தாக்குதலை நடத்தியுள்ளன.                                          … Read more

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இரு எரிபொருள் கப்பல்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு கப்பல்களும் புறப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஒரு கப்பல் 28,500 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளைக் கொண்டு வரவுள்ளது. மற்றைய கப்பல் 30,300 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி … Read more

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை விவகாரம்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

2000 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அண்மையில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பிரித்தானியாவின் போர் குற்ற அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நிமல்ராஜனின் கொலை தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்களிடம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உதவிகளை … Read more

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளினால் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்பொழுது … Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை முதல் நடைமுறையில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு விசேட அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் பீ.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைகளை மேற்கோள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற நடைமுறை காணப்பட்டது. எனினும், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதாவது நாளை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது பூரண … Read more

இலங்கையில் ரயில் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம்

ரயில்வே திணைக்களத்திடம், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது சுமார் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ள போதிலும், ரயில் சேவைக்கு அது தடையாக இருக்காதென தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் எரிபொருள் பயன்பாட்டில் ரயில்கள் இயங்குவதாகவும், … Read more

ஒத்துழைப்பு தராவிடின் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்! இந்தியா – சீனாவுக்கு ரஷ்யா மறைமுக மிரட்டல்

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.   உக்ரைன் மீது ரஷ்யா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா  மீது பொருளாதார தடைகளை விதித்து … Read more

ரஷ்யாவை துண்டு துண்டாக்கியிருக்க வேண்டும்! இந்தப் பேரழிவுக்கு நீங்களே காரணம் – சீற்றமடைந்த டொனால்ட் ட்ரம்ப்

புடின் புத்திசாலி என்பதில் பிரச்சினை இல்லை. அவர் புத்திசாலிதான். ஆனால், உண்மையான பிரச்சினையே, நமது தலைவர்கள் ஊமையாக இருப்பதுதான் என  அமெரிக்காவின் முன்னாள் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், பைடன் மீது விமர்சனம் முன்வைத்துள்ளார்.   உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா போர் தொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டதும், அமெரிக்கா போன்ற நாடுகள் நேட்டோ படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக … Read more