இலங்கையில் மின்நெருக்கடி ஏற்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் பின்னர் பாரிய அளவிலான மின் நிலையங்கள் அமைக்கப்படாததன் விளைவுகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வலுசக்தி தொடர்பான பொறியியலாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டளவில் 100 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தித்துறையின் பங்களிப்பு தற்சமயம் பாரிய அளவில் குறைவடைந்திருக்கிறது. 2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தியின் மூலம் நாட்டின் 70 சதவீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாகவும் திலக் சியம்பளாபிட்டிய கூறினார். தற்போது எரிபொருள் மற்றும் போதிய … Read more

புதிய சட்டத் திருத்தத்தால் கிடைக்கவுள்ள நன்மை: தொழில் அமைச்சர் அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஆலோசனைசபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக … Read more

யுகதனவி உடன்படிக்கையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: சட்டமா அதிபர்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுகதனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து உடன்பாடில்லாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னம் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை குறித்து அமைச்சரவையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் முரண்பாடு இருந்தால் அமைச்சரவையை விட்டு அமைச்சர்கள் விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதன் மூலம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதாகவே பொருள்படும் என … Read more

ஜனாதிபதி கோட்டபாய தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், மின்சார சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதன் காரணமாக பெற்றோலியத்திற்காக வழங்கப்பட்ட 80 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்துவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். சர்வதேச … Read more

கோட்டாபயவிடம் இருக்கும் இரகசியங்கள் அடங்கிய ஆவணம்! – ஐநா ஆணையாளர் நேரடியாக தலையீடு?

தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித … Read more

ஜெனிவா கூட்டத்தொடர்! அரசாங்கத்திற்கு எதிராக காய் நகர்த்தும் சஜித்

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த அரசாங்கமே … Read more

இலங்கை வந்து சென்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி!

அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தனி விமானத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், இம்மாதம் 19ம் திகதி அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். எரிபொருள் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்காக அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானமான Bombardier Express Global இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விமானத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை … Read more

இலங்கையில் கார் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் கார்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் சரியான தகவல்களின்றி அதிக விலை கொடுத்து பயனற்ற கார்களை கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளளது. இதனால் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “இது என தனிப்பட்ட அனுபவம். Toyota Vitz 2016 ரக கார் ஒன்றை நான் … Read more

தடுமாறும் இலங்கை! திணறும் ஆட்சியாளர்கள் – திவால் நிலையை தொட்டுவிட்டதா இலங்கை?

சர்வதேச ரீதியில் கடந்த சில மாதங்களாக இலங்கையின் பொருளாதார நிலை முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தற்போது காணப்படும் மிகப் பெரிய பிரச்சினையாக டொலர் நெருக்கடி காணப்படுகின்றது. இதன் தாக்கத்தினை இலங்கை மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். சாமான்ய மனிதர்களால் சமாளிக்க முடியாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. மிகத் தெளிவாகக் கூறினால் அன்றாடம் இரண்டு மரக்கறிகள் மற்றும் ஒரு மாமிச வகையுடன் தமது உணவு பழக்கத்தை கொண்டிருந்த ஒரு குடும்பம் ஒரு … Read more

நாடு பூராகவும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு – நாளை முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து நாளையதினம் (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 30 நிமிட மின்வெட்டும் மேலும் சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 40 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்த, இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டை … Read more