பெரும் நெருடிக்கடியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! விரைவில் எரிபொருளுக்கு நெருக்கடி?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தினால் டொலர்களைப் பெறுவதற்கு ரூபா கிடைக்காததால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு … Read more

2009இல் ஈழத்தமிழரை அழித்த அமெரிக்கா! ரஸ்யா – உக்ரைன் விவகாரத்தில் மாற்று வியூகம்

உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையேயான போர் பதற்றம் என்பது பேரம் பேசுவதற்கான யுத்தமாகவே காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உக்ரைன் – ரஸ்யா இடையேயான போரை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் 40 லட்சம் அகதிகள் வெளியேறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான நெருக்கடி காரணமாக … Read more

நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் அறவிடப்படும் 25 வீத மேலதிக வரி ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களிடம் அறவிடப்படமாட்டாது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நிதி அமைச்சர் நீண்ட விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெருவோருக்கு மட்டுமே 25 வீத ஒரு நேர வரி அறவிடப்படும் என நிதி … Read more

நாட்டின் தற்போதைய நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது. முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்தார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவல் காணப்படுகிறது. தற்போது வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்கள் அனைவரும் எந்தவொரு … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்நோக்கு பொது போக்குவரத்து மையத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்துடன் வெயங்கொட மற்றும் ஒருகொடவத்தை புகையிரத நிலையங்களை இணைக்கும் விரிவான புகையிரத பாதையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். Source link

யாழ். பலாலியில் தரையிறங்க தயாராகும் நரேந்திர மோடி?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவிவவருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு அவர் செல்ல திட்டமிடுவதான செய்திகளும் வெளிவந்துள்ளன. முதலில் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு செல்வதற்கு இந்திய அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பீம்ஸ்ரெக் … Read more

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பொரளையில் உள்ள அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவர்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும், அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  Source link

மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

கடந்த இரண்டு நாட்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக 20 கிகாவோட் மின் உற்பத்தியினை மேற்கொள்வதற்கு தேவையான நீர், கிடைக்கப்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், அது மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருப்பதற்கு போதுமானது அல்லவென  பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர் ஜனக ரத்நாயக்க  தெரிவித்தார். 20 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்றுள்ளதால், மின்சாரத்திற்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு 47 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கை மின்சார சபையுடன் இன்றும், நாளையும் பேச்சுவார்தையை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் 200 மெகாவோட் … Read more

காதலர் தினத்தில் உல்லாசம் – 36 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சொகுசு வாகனங்களில் வந்தே … Read more

விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்தபோது சேகரிக்கப்பட்ட தகவல்கள்! பிரித்தானியா குறித்து பீரிஸ் காட்டம்

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு – கொள்ளுப்பிட்டியில உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற, தெரிவு செய்யப்பட்ட படை அதிகாரிகளின் நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் மற்றும் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் தலைமை நாடாக செயற்படும் பிரித்தானியாவின் … Read more