பௌத்த பிக்குவாக துறவறம் பூண்ட பொலிவூட்டின் பிரபல நடிகர்!

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நேற்று (10) பேங்கொக்கில் துறவறம் பூண்டார். இதன்படி அவர் அடுத்த 15 நாட்களை துறவியாக தமது வாழ்க்கையை கழிக்கவுள்ளார். தர்மத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவில் மதத்தை வளர்க்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தம்மம் கற்க வேண்டிய நேரம். நிலையற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும் நேரம். அறிவைப் பெறுவதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அவருக்கு தாய்லாந்து உட்பட பல ஆசிய … Read more

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது. குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை … Read more

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த யாசகர்

ஹக்மன பகுதியில் உயிரிழந்த யாசகர் ஒருவர் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த யாசகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவரிடம் இருந்து இலட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹக்மன – கொங்கல பகுதியில் வாழ்ந்த வந்த 69 வயதான E.S.விமலதாஸ என்ற யாசகரிடமிருந்தே, இவ்வாறு பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த  யாசகர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே, அவர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  Source … Read more

எதிர்வரும் பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த நிதி அமைச்சர் பசில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.  இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக நிதியமைச்சர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.   Source link

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில், ஒட்சிஜன் தேவைப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது. பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை  குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும்  வலியுறுத்தியுள்ளார்.   Source link

காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து … Read more

மின்சாரம் துண்டிக்கப்படுமா? பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ள உறுதிமொழி

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை (14) வரை மின்வெட்டை  நடைமுறைப்படுத்த  வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என அவர்  உறுதியளித்துள்ளார்.  Source link

கோட்டாபயவை கட்டுப்படுத்தும் பலமான பெண் – ஹோட்டலுக்கு அழைத்து வந்தவரால் சர்ச்சை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பிரபுக்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல சோதிடர் என அழைக்கப்படும் அநுராதபுரம் ஞானக்காவின் நகங்களை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஞானக்கா சென்ற அழகு நிலையம் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய பிரபலத்தினால், ஞானக்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் … Read more

மஹிந்தவின் கடும் கோபத்திற்குள்ளான தென்னிலங்கை அமைச்சர் – பொதுவெளியில் நடந்ததென்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது வெளியில் கடுமையாக செயற்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அமைச்சர் ரோஹித அபேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த கோபமாக, ரோஹிதவின் கையை தட்டி விட்டார். மஹிந்தவின் கையை அமைச்சர் ரோஹித அபேவர்தண பிடிக்க சென்ற போது அதனை பிரதமர் கோபத்துடன் தட்டிவிடும் காணொளி … Read more

கொழும்பு புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபருக்கும் இடையில் மோதல் – ஒருவர் சுட்டுக்கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் பாதாள உலகக்குழு உறுப்பினர் எனவும், 26 வயதான ‘அப்bபா’ (Abba) என்றழைக்கப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டுபாயில் உள்ள ‘பாணந்துற சாலிந்த’ என்ற நபருக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். … Read more