வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடல் அலை வேகம் வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் … Read more

இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள் – விபத்தில் பலியான இளம் தம்பதி

 இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். உயிரிழந்த இருவரின் பிரேத … Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் புலனாய்வாளர்களால் ஏற்பட்ட பதற்ற நிலை! (Video)

திருகோணமலை – நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  திருகோணமலை மாவட்டத்தில் இன்று (12.05.2023) காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையிலே இவ்வாறு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் மாணவர்கள் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வருகை தந்த புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை ஒளிப்படம் எடுத்து … Read more

கல்வியில் உச்சம் தொட்ட வடக்கு மக்கள்! திட்டமிட்டு சிதைத்த சிங்களம் – நில அபகரிப்பை தொடரும் புத்தர்

நாம் வாழும் இந்த பரந்த உலகு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஆரம்பகாலகட்டம் தொடக்கம் தற்போது வரை புதுப் புது மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் பல அதிசயங்களாகவும், பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்களாகவும், இன்னும் பல விடை தெரியா மர்மங்களாகவும் உள்ளன. கற்கால மனிதனின் சிந்திக்கும் திறன் வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதர்கள் நாகரீகத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர். அவ்வாறு ஆரம்பித்த பயணத்தில் உதித்ததே தொடர்பாடலுக்கான ஒரு மொழி. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது … Read more

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  மே, 15ஆம் திகதி முதல் நடுமறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW  Source link

அரச ஊழியர்களின் சம்பளம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.  நேற்றையதினம்(11.05.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா அகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், முதலில் … Read more

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் கட்சிகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் விடுத்துள்ள கோரிக்கை! (Photos)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு- கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.  இது தொடர்பில் வடக்கு- கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், மௌனிக்கப்பட்ட யுத்தம் “2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து கையளிக்கப்பட்ட சரணடைந்த கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வான்களிலும் ஆயுதம் முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும் சிங்கள அரசாலும் அதன் இராணுவ துணைக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி 14 வருடங்களாக … Read more

தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்! போரின் அடுத்தகட்ட நகர்விற்கு ரஷ்யா செய்த இரகசிய சதி அம்பலம்

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் கோபுரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் இரகசிய சதியென அமெரிக்காவின் `The Institute for the Study of War’ அமைப்பு தெரிவித்துள்ளது. மே 9 ஆம் திகதி நடைபெற்ற `வெற்றி தின’ அணிவகுப்புக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரை கொல்ல இரண்டு ஆளில்லா ட்ரோன்களை கிரெம்ளின்மீது உக்ரைன் ஏவியிருந்ததாக உக்ரைன் ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது. … Read more

களுத்துறை மாணவி விடுதியிலிருந்த போது ஆசிரியரிடமிருந்து வந்த அழைப்பு! விடுதி உரிமையாளரின் மனைவியும் சிக்கினார்

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஆசிரியரொருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறையில் உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் இந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்த தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் நேற்று (10.05.2023) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது “குறித்த மாணவியை … Read more

ஜனாதிபதியுடன் வடக்கு- கிழக்கு எம்.பிக்கள் சந்திப்பு! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் (Video)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11.05.2023) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, 1985 ஆம் ஆண்டு இருந்த வரைப்படத்திற்கு அமைய காணிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் எம்.பிக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள்  அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டம் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் நெடுக்குநாறி மலை விவகாரம் … Read more